தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அம்மா வருவதையே விரும்புகிறார்கள் – தோழர் ஸ்டனிஸ்

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அம்மா வருவதையே விரும்புகிறார்கள் அம்மா என்றால் பிடிக்காமல் இருந்தது அந்தக்காலம் தற்போது அம்மாதான் வர வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பெருவாரியான இலங்கைத தமிழர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் விரும்பத்துக்கு பிரதான காரணம் ஊடகங்கள் ஐயாவை பற்றி தாறுமாறாக விமர்சிப்தே, More »

கிழக்கின் உதயமும் வடக்கின் வசந்தமும்- வெளியீடு 57

2007ம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் சகல பகுதிகளிலிருந்தும் அரச படைகள் புலிகளை முற்றாக துரத்தியது, தோற்கடித்தது 2008ம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து கிழக்கின் உதயம் என்ற பெயரில் யுத்தத்தால் அழிந்து கிடந்த கிழக்கு மாகாணத்தை மிக விரைவாக புனர் நிர்மானம் செய்து மக்களுக்கு புனர்வாழ்வளி More »

கண்ணோட்டம் ஆசிரிய தலையங்கம் – வெளியீடு 57

2011ம் ஆண்டு இலங்கையின் தேசிய இனங்களுக்கிடையிலான நல்லுறவுக ளும் யுத்தத்தால் அழிந்து கிடக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணம், மற்றும் துரித பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளும் மீட்சி பெற வேண்டும் இலங்கை முழுவதும் ஒரு வளம் மிக்க நாடாக உருவாக வேண்டு;ம் என்பதே More »

அன்பார்ந்த நண்பர்களே! ஆற்றல்மிகு தோழர்களே… தோழர் வரதராஜப்பெருமாள் கடிதம் வெளியீடு-57

உங்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த புதுவருட நல்வாழ்த்துக்களையும் பொங்கல் நல்வாழ்த்துக்களையம் ஒரு சேர தெரிவித்துக் கொள்கிறேன். எமது வாழ்வில் கடந்து போயுள்ள 2010 ம் ஆண்டு அதற்கு முந்திய ஆண்டுகளைவிட பல நல்ல விடயங்களை நமக்கு நடத்திப் போயிருக்கிறது. இந்த 2011ம் ஆண்டா More »

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அம்மா வருவதையே விரும்புகிறார்கள் – தோழர் ஸ்டனிஸ்

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அம்மா வருவதையே விரும்புகிறார்கள்

அம்மா என்றால் பிடிக்காமல் இருந்தது அந்தக்காலம் தற்போது அம்மாதான் வர வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பெருவாரியான இலங்கைத தமிழர்கள் விரும்புகிறார்கள்.

அவர்களின் விரும்பத்துக்கு பிரதான காரணம் ஊடகங்கள் ஐயாவை பற்றி தாறுமாறாக விமர்சிப்தே, ஐயா தமிழ் இனத்துக்கு துரோகம் செய்து விட்டார்,ஐயா காங்கிரசுடன் சேர்ந்து இனப்படுகொலை நடந்ததிற்கு துணை போய்விட்டார் பொதுவாக ஐயா தமிழ் இன துரோக பட்டியலில் சேர்க்கப்புட்டு விட்டார்

அரசை மடக்கி தமிழ்மனங்களைப் புல்லரிக்க வைக்கும் TNA:->சுல்தானின் மேய்ச்சல் வெளியிலிருந்து …

(நன்றி – தினமுரசு)
சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள இந்தத் தீவில் பெரும்பான்மை மக்களால் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அரசாங்கத்துடன் அவர்கள் பேசவேண்டும் என்பது யதார்த்தம். பேசி அவர்களிடம் தீர்வைப் பெறமுடியாது என்று கண்டுகொண்டவர்கள் என்றால் அவர்கள் என்ன செய்யலாம்? ஏனைய உலக நாடுகள் அரசாங்கங்களிடம் நம் பிரச்சினையை எடுத்துப்போகும் முயற்சிக்குச் சமாந்தரமாக இந்தத் தீவிலுள்ள அனைத்துத் தரப்பு மக்கள் மனங்களுடனும் பேசுவது முக்கியமல்லவா? அப்போதுதானே நம் கோரிக்கைகளின் நியாயத்தன்மை துலங்கவும் எடுபடவும் வாய்ப்பிருக்கிறது? யுத்தம் முடிந்த சூழலிலும் அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? முஸ்லிம், மலையக மக்களிடமும் பிறகு சிங்கள பொது மக்களிடமும் நம் நியாயத்தை விளங்கப்படுத்தாமல், அவர்களின் கணிசமான ஆதரவை பெற்றுக்கொண்டு முன்செல்ல முற்படாமல் அரசாங்கத்தை – உலகத்தைச் சாடிக்கொண்டிருந்து ஆகப்போவதென்ன?

தனிமை, சமூகப்பாதுகாப்பின்மை என்பன எமது சமூகத்தில் மிக மோசமான பிரச்சனைகளாகும்- தோழர் சுகு-

சர்வதேச பெண்கள் தினம்சவால்களை எதிர்கொண்டு முன் செல்ல சில கருத்துக்கள்

சர்வதேச பெண்கள் தினம் உலகளாவிய அளவில் நினைவு கூரப்படும் நிலையில் இலங்கையில் பெண்கள் நிலையையும் ,பால் சமத்துவமின்மையையும் எண்ணிப்பாhர்க்க வேண்டும்.
இலங்கை யுத்தத்தில் மரணமடைந்தவர்கள் போக வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாகவே இருக்கின்றன.
இவர்கள் பல்வேறு சவால்களை எதிர் நோக்குகிறார்கள் .பாலியல் தக்குதல்கள் வீட்டிலும் வெளியிலும் இவற்றையும் தாண்டி வீட்டின் பொருளாதாரம், பிள்ளைகளின் கல்வி இன்னோரன்ன விடயங்களுக்கான தேவைகளுக்காககவும் அலைய வேண்டியருக்கிறது
சிறையிலுள்ள பிள்ளைகளின் விடுலைக்காக சிறப்பு முகாகளுக்கும் சிறைகளுக்கும் இவர்களே பெரும்பாலும் செல்ல வேண்டியிருக்கிறது.

TNA கூசாமல் உதார் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்: சுல்தானின் மேய்ச்சல் வெளியிலிருந்து…

(நன்றி – தினமுரசு)
“தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் நாங்கள்தான் எண்டதை வாக்களிப்பில் காட்டுங்கள். மகிந்தவை வெருட்டி தீர்வை வெண்டு தாறம்” என்றுதான் இப்போதும் கூசாமல் உதார் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் கூட்டமைப்பினர். கிடைக்கச் சாத்தியமான தீர்வைப் பற்றிப் பேசுவார்களா? அல்லது மகிந்தவை வெருட்டிச் சம்மதிக்க வைக்கும் விண்ணாணம் எதையேனும் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களா?
புலிகள் வீழ்ந்து இரண்டு வருடமாகிறதே…. மக்களின் அல்லல்களை மேலும் நீடிக்க விடாமல் அவர்கள் மீளும் வழியை விரைவுபடுத்த இவர்கள் செய்த முன்முயற்சிகள் என்னென்ன? என்று யோசித்தால், சில வீரவசனங்களும்…. வெளிநாட்டுப் பயணங்களும்…. பழைய பெருங்காய டப்பா எதிர்ப்பறிக்கைகளும்…. சனத்தைப் பொய்யான கனவுகளில் மிதத்திப் போட்டுச் சரித்த ‘தேசத்தந்தை’ முடிந்தார், இனி அவர் தாயை வைத்தாவது உணர்ச்சியேத்தலாமா என்று ஓடிய நாடகமும்தான் ஈராண்டுச் சாதனையாக எஞ்சுகின்றன! பதவி என்று வந்துவிட்டால் முன்னாள் புலியெதிர்ப்புப் போராளிகளுக்கும்தான் திடீரெனப் பார்வதியம்மா மீது எவ்வளவு பாசக்கதறல் வருகிறது!

சந்திப்புக்கள் இன்னும் ஆழமும், முதிர்ச்சியும், ஈடுபாடும் நிறைந்ததாக ஆகவேண்டும்- பாரிஸ் இலக்கியச்சந்திப்பு பற்றி தோழர் சுகு

சந்திப்புக்கள் இன்னும் ஆழமும், முதிர்ச்சியும், ஈடுபாடும் நிறைந்ததாக ஆகவேண்டும்-

38 இலக்கியச் சந்திப்பு பிரான்சின் தலைநகர் பாரிசில் பெப்ரவரி 19,20 ந்திகதிகளில் நடைபெற்றது. 70 இற்கு மேற்பட்டோர் பங்கு கொணடனர்.
இந்நிகழ்வில் தீண்டாமைக் கொடுமைகள் ,பெண்ஓடுக்குமுறை இனரீதியான முரண்பாடுகள், உறவுகள் ,தன்னினச்சேர்க்கையாளர்கள,; திருநங்கையர் எதிர்நோக்கும் சவால்கள் சூழலியல் சிதைவுகள் வடஆபிரிக்க அரபுக் கிளர்ச்சிகள் பேசப்பட்டன.

சுல்தானின் வாரந்தர மேய்ச்சல் வெளியிலிருந்து……

நன்றி - தினமுரசு  
தம் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுகையில் முற்போக்கானதாகத் தோற்றப்பாடு கொள்ளும் ஒரு இனக்குழு, தமக்குள்ளேயே இருக்கும் ஏனைய வித்தியாசங்களை ஏற்றுக்கொள்ளாத அல்லது விரும்பாத போது, அதுவும் ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் ஆதிக்க சக்தியாகவே மாறுகிறது.

அடையவே முடியாத மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் கொண்டிருப்பதைவிடவும் …சாத்தியமான வழிமுறைகளைக் குறித்துச் சிந்தியுங்கள்

நன்றி – வீரகேசரி 20- 02- 2011

கிருஷ்ணமூர்த்தி)

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ஏறக்குறைய ஏழு மாதங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் சில அபிப்பிராயங்களை தெரிவித்திருந்தார்.

13வது திருத்தச்சட்;டத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக அதிகாரப் பகிர்வுகளை சாத்தியப்படுத்துதல், இநத அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தை சரியான முறையில் செயற்படுத்துதற்கு உடனடியாக ஒரு ஆனைக்குழுவை ஏற்படுத்துதல். இந்த அதிகாரப் பரவலாக்கல் ஆனைக்குழுவில் அரசியல் யாப்பு சம்பந்தமான விடயங்களில் நிபுணத்துவமுடையவர்கள் விடயங்களைத் திறமையாக நிர்வகிக்கக்கூடிய திறனாளர்களைக் கொண்ட நிபுணர்குழுவொன்றை அதை;தல் அவசியமாகும் என்பது வரதராஜப்பெருமாளின் சாராம்சக் கருத்தாகும். அடையவே முடியாத  மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் கொண்டிருப்பதைவிடவும் அடைய முடிந்த ஸ்ரீதேவிக்காக  கைகளை நீட்டலாம் என்பதைப் போல் சாத்தியமான  வழிமுறைகளைக் குறித்துச் சிந்தியுங்கள் என்பதாக வரதராஜப் பெருமாள் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். தன்னுடைய இந்த நிலைப்பாட்டை அவர் இலங்கையில் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பெருமாளின் பிரசன்னம் அதிகளவில் காணப்படுகிறது.

கிழக்கின் உதயமும் வடக்கின் வசந்தமும்- வெளியீடு 57

2007ம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் சகல பகுதிகளிலிருந்தும் அரச படைகள் புலிகளை முற்றாக துரத்தியது, தோற்கடித்தது 2008ம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து கிழக்கின் உதயம் என்ற பெயரில் யுத்தத்தால் அழிந்து கிடந்த கிழக்கு மாகாணத்தை மிக விரைவாக புனர் நிர்மானம் செய்து மக்களுக்கு புனர்வாழ்வளி ப்பது என்ற அபிவிருத்தித் திட்டத்தை அரசு அறிவித்தது.

கண்ணோட்டம் ஆசிரிய தலையங்கம் – வெளியீடு 57

2011ம் ஆண்டு இலங்கையின் தேசிய இனங்களுக்கிடையிலான நல்லுறவுக ளும் யுத்தத்தால் அழிந்து கிடக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணம், மற்றும் துரித பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளும் மீட்சி பெற வேண்டும் இலங்கை முழுவதும் ஒரு வளம் மிக்க நாடாக உருவாக வேண்டு;ம் என்பதே நல்லெண்ணம் கொண்ட எல்லோரினதும் விருப்பமாகும்
இந்த நாட்டை கொள்ளையர்களும் ,கொலையாளிகளும் ஊழல் பேர்வழிக ளும,; ஊரையெல்லாம் சுருட்டி தன் உலையில் போடும் மோசடிப் பெருச் சாளிகளும் தலையெடுத்து ஆட்டம் போடுகின்ற நிலைமை முடிவுக்கு வர வேண்டும்.
பட்டதெல்லாம் போதும் கெட்டதெல்லாம் காணும் இனி ஒரு புதிய விதி செய்வோம் இந்நாட்டின் அனைத்து இன மக்களும் ஒருவரை ஒருவர் மதி த்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒருவர் நன்மையை மற்றவரோடு பகிர்ந்து ஒருவரது துன்பத்தை மற்றவரும் தானும் பரிமாறிக்கொண்டு அதில் பங்கெடுத்து சகோதரர்களாக வாழும் நிலைமையை இந்த நாடு அடைய வேண்டும்.

அன்பார்ந்த நண்பர்களே! ஆற்றல்மிகு தோழர்களே… தோழர் வரதராஜப்பெருமாள் கடிதம் வெளியீடு-57

உங்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த புதுவருட நல்வாழ்த்துக்களையும் பொங்கல் நல்வாழ்த்துக்களையம் ஒரு சேர தெரிவித்துக் கொள்கிறேன். எமது வாழ்வில் கடந்து போயுள்ள 2010 ம் ஆண்டு அதற்கு முந்திய ஆண்டுகளைவிட பல நல்ல விடயங்களை நமக்கு நடத்திப் போயிருக்கிறது. இந்த 2011ம் ஆண்டா னது அவற்றையும் விட மேலும் பல நல்ல விடயங்களை நமக்குத் தரும் ஆண்டாக அமைய வேண்டுமென மனதார விரும்பு வோமாக!