<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>kannoddam</title>
	<atom:link href="http://www.kannoddam.com/wordpress/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.kannoddam.com/wordpress</link>
	<description>Just another WordPress weblog</description>
	<lastBuildDate>Sun, 15 May 2011 12:11:23 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	
		<item>
		<title>தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள்  அம்மா வருவதையே விரும்புகிறார்கள் &#8211; தோழர் ஸ்டனிஸ்</title>
		<link>http://www.kannoddam.com/wordpress/?p=334</link>
		<comments>http://www.kannoddam.com/wordpress/?p=334#comments</comments>
		<pubDate>Sun, 15 May 2011 12:10:20 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கண்ணோட்டம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.kannoddam.com/wordpress/?p=334</guid>
		<description><![CDATA[தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அம்மா வருவதையே விரும்புகிறார்கள் அம்மா என்றால் பிடிக்காமல் இருந்தது அந்தக்காலம் தற்போது அம்மாதான் வர வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பெருவாரியான இலங்கைத தமிழர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் விரும்பத்துக்கு பிரதான காரணம் ஊடகங்கள் ஐயாவை பற்றி தாறுமாறாக விமர்சிப்தே, ஐயா தமிழ் இனத்துக்கு துரோகம் செய்து விட்டார்,ஐயா காங்கிரசுடன் சேர்ந்து இனப்படுகொலை நடந்ததிற்கு துணை போய்விட்டார் பொதுவாக ஐயா தமிழ் இன துரோக பட்டியலில் சேர்க்கப்புட்டு விட்டார் தமிழக வாக்களார்களிடம் ஒட்டு]]></description>
			<content:encoded><![CDATA[<p>தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள்  அம்மா வருவதையே விரும்புகிறார்கள்</p>
<p>அம்மா என்றால் பிடிக்காமல் இருந்தது அந்தக்காலம் தற்போது அம்மாதான் வர வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பெருவாரியான இலங்கைத தமிழர்கள் விரும்புகிறார்கள். </p>
<p>அவர்களின் விரும்பத்துக்கு பிரதான காரணம் ஊடகங்கள் ஐயாவை பற்றி தாறுமாறாக விமர்சிப்தே, ஐயா தமிழ் இனத்துக்கு துரோகம் செய்து விட்டார்,ஐயா காங்கிரசுடன் சேர்ந்து இனப்படுகொலை நடந்ததிற்கு துணை போய்விட்டார் பொதுவாக ஐயா தமிழ் இன துரோக பட்டியலில் சேர்க்கப்புட்டு விட்டார்<span id="more-334"></span></p>
<p>தமிழக வாக்களார்களிடம் ஒட்டு பெறுதற்காக இலங்கைத் தமிழர் பிரச்சினை காலம்,காலமாக பயன்படுத்தப்படடு வருகிறது  தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் காலத்தில் இலங்கைத் தமிழர் மீது பாசம் பொழிவது என்பது சர்வசாதாரண காரியமாக மாறிவிட்டது.1983 இருந்து இன்று  வரை இந்த பாசம் தொடர்கிறது ஆனால் இலங்கைத் தமிழர்க்ள வாழ்வில் உருப்படியான நல்ல காரியம் எதுவும்  நடைபெறவில்லை இலங்கைத் தமிழர்களுக்காக நடைபெற்ற பல நல்ல காரியங்களை தமிழக கட்சிகள் கெடுத்ததுதான் வரலாறாக உள்ளது.</p>
<p>அம்மாவை ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் எதிர்ப்பு சக்திகளுக்கு பிடிக்கும் ஜயாவை ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவு சக்திகளுக்கு பிடிக்கும்.ஏனென்றால் ஜயா அவர்களு;ககு பல உதவிகளை செய்துள்ளதாக அவரது ஆட்சி பறிபோய் உள்ளது அதற்கு ஒரு எடுத்துக்காட்டு, இது இன்று முரன்பட்ட நிற்பதற்கு ஐயா காங்கிரசுடன் கூட்டு வைத்திருப்பதே காரணம்.காங்கிரஸ் இந்திய ஆட்சியில் இருப்பதால் பழி,பாவம் எல்லாம் அதனுடன் கூட்டு வைத்துள்ள ஜயாவிற்கும் சேர்ந்து விடுகிறது..</p>
<p>அம்மா தற்போதுள்ள இந்த நிலமையை நன்கு பயன்படுத்தி இருப்தாகவே பார்க்கப்படுகிறது. ஜயாவை திட்டுவதற்கு அம்மாவிற்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது சும்மா கிடந்த கிழவிக்கு அவல் கிடைத்தது போல் அமைந்து விட்டது.</p>
<p>தமிழகத்தில் உள்ள இலங்கதை; தமிழர்களுக்கு ஐயா குடியுரிமை பெற்றுத் தருவதாக  வாக்களித்தார் ஆனால் இதுவரை ஒன்றும் நடைபெறவில்லை. யுத்தம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போது ஜயாவின் இந்த அறிவிப்பு அரசியல் கபடம் என இலங்கை அகதிகளே பேசத் தொடங்கிவிட்டனர்.அம்மா தேர்தல் காலத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு பல சலுகைகளை அறிவித்திருந்ததையும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ அகதிகள் அரசியல் நாடகம் என்றே கூறினர்</p>
<p>இலங்கைத் தமிழ் அகதிகள் விரும்பம் போல் அம்மாதான் ஆட்சி அமைக்கப் போகிறார் இதனால் இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது நடத்ததால் நாம் எல்லோரும் வரவேற்போம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kannoddam.com/wordpress/?feed=rss2&#038;p=334</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அரசை மடக்கி தமிழ்மனங்களைப் புல்லரிக்க வைக்கும் TNA:-&gt;சுல்தானின் மேய்ச்சல் வெளியிலிருந்து &#8230;</title>
		<link>http://www.kannoddam.com/wordpress/?p=327</link>
		<comments>http://www.kannoddam.com/wordpress/?p=327#comments</comments>
		<pubDate>Sun, 13 Mar 2011 21:57:56 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.kannoddam.com/wordpress/?p=327</guid>
		<description><![CDATA[(நன்றி &#8211; தினமுரசு) சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள இந்தத் தீவில் பெரும்பான்மை மக்களால் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அரசாங்கத்துடன் அவர்கள் பேசவேண்டும் என்பது யதார்த்தம். பேசி அவர்களிடம் தீர்வைப் பெறமுடியாது என்று கண்டுகொண்டவர்கள் என்றால் அவர்கள் என்ன செய்யலாம்? ஏனைய உலக நாடுகள் அரசாங்கங்களிடம் நம் பிரச்சினையை எடுத்துப்போகும் முயற்சிக்குச் சமாந்தரமாக இந்தத் தீவிலுள்ள அனைத்துத் தரப்பு மக்கள் மனங்களுடனும் பேசுவது முக்கியமல்லவா? அப்போதுதானே நம் கோரிக்கைகளின் நியாயத்தன்மை துலங்கவும் எடுபடவும் வாய்ப்பிருக்கிறது? யுத்தம் முடிந்த சூழலிலும்]]></description>
			<content:encoded><![CDATA[<p>(நன்றி &#8211; தினமுரசு)<br />
சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள இந்தத் தீவில் பெரும்பான்மை மக்களால் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அரசாங்கத்துடன் அவர்கள் பேசவேண்டும் என்பது யதார்த்தம். பேசி அவர்களிடம் தீர்வைப் பெறமுடியாது என்று கண்டுகொண்டவர்கள் என்றால் அவர்கள் என்ன செய்யலாம்? ஏனைய உலக நாடுகள் அரசாங்கங்களிடம் நம் பிரச்சினையை எடுத்துப்போகும் முயற்சிக்குச் சமாந்தரமாக இந்தத் தீவிலுள்ள அனைத்துத் தரப்பு மக்கள் மனங்களுடனும் பேசுவது முக்கியமல்லவா? அப்போதுதானே நம் கோரிக்கைகளின் நியாயத்தன்மை துலங்கவும் எடுபடவும் வாய்ப்பிருக்கிறது? யுத்தம் முடிந்த சூழலிலும் அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? முஸ்லிம், மலையக மக்களிடமும் பிறகு சிங்கள பொது மக்களிடமும் நம் நியாயத்தை விளங்கப்படுத்தாமல், அவர்களின் கணிசமான ஆதரவை பெற்றுக்கொண்டு முன்செல்ல முற்படாமல் அரசாங்கத்தை – உலகத்தைச் சாடிக்கொண்டிருந்து ஆகப்போவதென்ன?</p>
<p><span id="more-327"></span></p>
<p>“நாங்கள் புலிகள் கேட்டதைக் கேட்கவில்லை, அதற்கு முன்பே தந்தை செல்வநாயகம் கேட்டதையே கேட்கிறோம்” என்று அரசை மடக்கி தமிழ்மனங்களைப் புல்லரிக்க வைக்கும் ‘பொயின்ற்’களை தேர்தல் மேடைகளில் விளாசிவரும் கூட்டமைப்பினர், அந்த ஆகடியத்தை அத்துடன் நிறுத்தினால் பரவாயில்லை. அதற்குமேல் அவர்கள் மக்களுக்கு ஏத்தும் அதே பழைய ஊசிதான் பயங்கரம். அது இன்னும் கிருமிநீக்கம் செய்யப்படாமலே உள்ளது. அவர்களின் தேசியத் தலைவர், தலைவரின் தாய் இறப்புகளாலெல்லாம் அவர்கள் மனங் கலங்கிப் போனாலும் கொள்கைப் பிடிப்பில் இம்மியும் மாறவில்லை என்பதற்கு நாம் வியப்பதா திகைப்பதா தெரியவில்லை! மிகத் தூய்மையான எல்லாம் நிறைந்த ஒரு தீர்வுக்காக கடைசி உயிர்வரை அழிக்கும் திட்டத்தில் இவர்கள் இன்னும் விடாப்பிடியாக உள்ளார்கள் என்றறிய நடுக்கமே உண்டாகிறது. “வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டித் தீர்வையே நாம் கேட்கிறோம். அதை அவர்கள் தரப்போவதில்லை. அதை அம்பலப்படுத்தவே பேச்சுவார்த்தைக்குப் போகிறோம்” என்பதற்கே இப்போதும் வாக்குகள் விழும் என்று நம்பும் சூழல் இங்குள்ளதென்றால் என்ன மாதிரியான ஒரு சமூகம் நாம்?<br />
அரசாங்கம் தர முடியாததைக் கேட்பது@ அதன்மூலம் எதிர்ப்புணர்ச்சியைப் பெருக்குவது@ முறுகல் நிலைமை தணியவிடாமல் பார்த்துக் கொள்வது@ கொள்கை-இலட்சியம்-இனக்குழுப்பெருமை-தனித்துவத்திற்காக எதையும் இழக்கலாம் என்ற உணர்ச்சிகரத்தில் கொந்தளிக்கும் திரளாக மக்களை வைத்திருப்பது@ எதிர்ப்பு வீரவசனங்களால் தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளை வேட்டையாடிக் கொள்வது…. அத்துடன் எல்லாம் (தலைவர்களுக்கு) இனிதாய் முடிந்துவிடுகிறது. மக்களின் கஷ்டங்களோ தொடர்கிறது.<br />
புலிகள் முடிந்து இரண்டு வருசமான பிறகும் இந்த நாடகத்தையே இவர்கள் வெற்றிகரமாகத் தொடர்வதற்கு இயலுகின்ற நம் அறிவுச்(!)சமூக நிலையை என்ன சொல்ல?<br />
சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள இந்தத் தீவில் பெரும்பான்மை மக்களால் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அரசாங்கத்துடன் அவர்கள் பேசவேண்டும் என்பது யதார்த்தம். பேசி அவர்களிடம் தீர்வைப் பெறமுடியாது என்று கண்டுகொண்டவர்கள் என்றால் அவர்கள் என்ன செய்யலாம்? ஏனைய உலக நாடுகள் அரசாங்கங்களிடம் நம் பிரச்சினையை எடுத்துப்போகும் முயற்சிக்குச் சமாந்தரமாக இந்தத் தீவிலுள்ள அனைத்துத் தரப்பு மக்கள் மனங்களுடனும் பேசுவது முக்கியமல்லவா? அப்போதுதானே நம் கோரிக்கைகளின் நியாயத்தன்மை துலங்கவும் எடுபடவும் வாய்ப்பிருக்கிறது? யுத்தம் முடிந்த சூழலிலும் அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? முஸ்லிம், மலையக மக்களிடமும் பிறகு சிங்கள பொது மக்களிடமும் நம் நியாயத்தை விளங்கப்படுத்தாமல், அவர்களின் கணிசமான ஆதரவை பெற்றுக்கொண்டு முன்செல்ல முற்படாமல் அரசாங்கத்தை – உலகத்தைச் சாடிக்கொண்டிருந்து ஆகப்போவதென்ன? தனிநாடு, சமஷ்டி, முழு அதிகாரம் என்று உதார் விட்டுக்கொண்டே இருப்பதுதான் அரசாங்கத்தையும் ஏனைய தரப்பு மக்களையும் இணக்கத்திற்கு நகர்த்தும் வழியா?<br />
அரசாங்கம் தர முடியாத தீர்வையே நாம் கேட்டுக் கொண்டிருப்போம்@ பெரும்பான்மை மக்களும் நம் தீர்வை ஒப்புக்கொள்ளவே மாட்டார்@ நமக்கு அநீதிகள் தொடர்ந்து நடந்தபடியேதான் இருக்கும் என்கிற வெறுப்பிலும் விரோதத்திலும் மக்களைத் திரள வைத்து இப்போதும் இந்தத் தீவுக்குள் விலகித் தனிப்படுத்திக் கொண்டிருப்பதன் மூலம் என்ன செய்ய உத்தேசிக்கிறீர்கள்? மீண்டும் ‘புலியிச’க் கனவுக்குள் அமிழ்த்தி, ‘அழியும் மக்களின் ஆக்ரோச எம்பீக்களாய்’ வருவது ஒன்றுதானா நினைப்பு? ‘சிங்களவனைப் பழிக்குப் பழி வாங்காமல் தமிழனுக்கு வாழ்வில்லை’ என்று, இங்குள்ள நிலைமை பற்றி ஒரு சுடலையும் அறியாமல் உசார் பீலா விட்டுக் கொண்டிருக்கும் அயலக, உலகத் தமிழர்களின் உருவாட்டம்தானா உங்களுக்கும் இனிக்கிறது? வாழ்வைத் தொலைத்துவிட்டு வதைபடுதலில் தமிழ்வீரச் சிலிர்ப்பைக் கண்டுகொள்ளும் பழங்குடி ரோசத்தில் வெளியுலகார் திளைக்கலாம். வதைபடும் மக்களிடம் வாக்குகளுக்குப் போகும் நீங்களுமா அவர்களுக்கு வால்முறுக்கி விடுவது?<br />
பேச்சுவார்த்தையில் பிரயோசனமில்லை, எதிர்த்தரப்பு சரிவரவே மாட்டாது என்ற கண்டுபிடிப்புகள்தானா இப்போதும் உங்கள் வழிகாட்டல்? அவ்வளவுதானா பகைமறப்பும் மீளிணக்கமும்? தமிழ்மக்கள் எங்களை ஏகப்பிரதிநிதிகளாய்த் தெரிவுசெய்து விடவேண்டும். அதன்பிறகுதான் விசயத்தை வெல்லலாம் என்று பந்தை மக்கள் பக்கம் அடித்து விட்டிருக்கிறீர்கள். பந்தைக் கையில் பிடித்து வைத்துக்கொண்டு செய்வதறியாமல் நாங்கள்! எல்லோரும் ஒத்து உங்கள் பின்னால் நிற்க வேண்டும். அந்தப் பலத்தில் நீங்கள் அரசை மிரட்ட வேண்டும். அவர்கள் பதறித் துடித்து உங்கள் கையில் தீர்வைத் தந்துவிட வேண்டும். ச்சாய்…. நினைத்துப் பார்க்கவே எவ்வளவு ஜிலுஜிலுப்பாய் இருக்கிறது! இந்த சிம்பிள் விசயம் விளங்காமல் துரோகிகள் ஆளுக்கொரு கட்சி வைத்துக்கொண்டு அலைகிறார்கள். இவர்களை எல்லாம் என்ன செய்வது? அவங்கள் (புலிகள்) வேறு இல்லை. கொடுமை!<br />
ஒற்றுமைப் பந்து எங்கள் பக்கம் இருக்கும் வரை நீங்கள் விளையாடாமல் இருப்பதை கேள்வி கேட்க முடியுமா? நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கலங்கி, இந்த ஒற்றுமை கெட்ட தமிழ்ச்சாதியை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான். மலையைத் தூக்கிக் கொண்டு நடப்பேன் என்று உதார் விட்டுக் கொண்டிருந்த பயில்வான் கதை கேட்டிருக்கிறோமல்லவா! ஊரிலுள்ள எல்லோருமாய்ச் சேர்ந்து அந்த மலையைத் தூக்கி என் தோளில் வைத்துவிடுங்கள். அதன்பிறகு பாருங்கள் என் கெட்டித்தனத்தை என்ற கதைதான்.<br />
வெறுப்பும் பழிவாங்கும் உணர்ச்சியும் மறையாமல் இணக்கமும், இணைந்து முன்னேறும் வாழ்வும் எப்படிச் சாத்தியமாகும்? கோபம், பகை, விரோதம் போன்றவற்றைக் கைவிடாமல் நல்லிணக்க வாழ்வுக்கு எப்படி வாசல் தெரியும்?<br />
ஒரு சாமுராய் வீரன் ஸென் துறவியிடம் வந்து கேட்டான்:<br />
“சொர்க்கத்திற்கு நரகத்திற்குப் போவதற்கென்று வாசல் ஏதும் உண்மையாகவே இருக்கிறதா?”<br />
துறவி அவனைப் பார்த்தபடியே சொன்னார்:<br />
“உன்னைப் பார்த்தால் வீரனைப் போலவே இல்லையே. பிச்சைக்காரனைப் போலல்லவா இருக்கிறாய்!”</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kannoddam.com/wordpress/?feed=rss2&#038;p=327</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தனிமை, சமூகப்பாதுகாப்பின்மை என்பன எமது சமூகத்தில் மிக மோசமான பிரச்சனைகளாகும்- தோழர் சுகு-</title>
		<link>http://www.kannoddam.com/wordpress/?p=324</link>
		<comments>http://www.kannoddam.com/wordpress/?p=324#comments</comments>
		<pubDate>Wed, 09 Mar 2011 17:49:47 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.kannoddam.com/wordpress/?p=324</guid>
		<description><![CDATA[சர்வதேச பெண்கள் தினம்சவால்களை எதிர்கொண்டு முன் செல்ல சில கருத்துக்கள் சர்வதேச பெண்கள் தினம் உலகளாவிய அளவில் நினைவு கூரப்படும் நிலையில் இலங்கையில் பெண்கள் நிலையையும் ,பால் சமத்துவமின்மையையும் எண்ணிப்பாhர்க்க வேண்டும். இலங்கை யுத்தத்தில் மரணமடைந்தவர்கள் போக வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாகவே இருக்கின்றன. இவர்கள் பல்வேறு சவால்களை எதிர் நோக்குகிறார்கள் .பாலியல் தக்குதல்கள் வீட்டிலும் வெளியிலும் இவற்றையும் தாண்டி வீட்டின் பொருளாதாரம், பிள்ளைகளின் கல்வி இன்னோரன்ன விடயங்களுக்கான தேவைகளுக்காககவும் அலைய]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.kannoddam.com/wordpress/wp-content/uploads/2011/03/sugu-Paris-20111.jpg"><img src="http://www.kannoddam.com/wordpress/wp-content/uploads/2011/03/sugu-Paris-20111-150x126.jpg" alt="" title="sugu Paris 2011" width="150" height="126" class="alignleft size-thumbnail wp-image-325" /></a><strong>சர்வதேச பெண்கள் தினம்</strong>சவால்களை எதிர்கொண்டு முன் செல்ல சில கருத்துக்கள்</p>
<p>சர்வதேச பெண்கள் தினம் உலகளாவிய அளவில் நினைவு கூரப்படும் நிலையில் இலங்கையில் பெண்கள் நிலையையும் ,பால் சமத்துவமின்மையையும் எண்ணிப்பாhர்க்க வேண்டும்.<br />
இலங்கை யுத்தத்தில் மரணமடைந்தவர்கள் போக வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாகவே இருக்கின்றன.<br />
இவர்கள் பல்வேறு சவால்களை எதிர் நோக்குகிறார்கள் .பாலியல் தக்குதல்கள் வீட்டிலும் வெளியிலும் இவற்றையும் தாண்டி வீட்டின் பொருளாதாரம், பிள்ளைகளின் கல்வி இன்னோரன்ன விடயங்களுக்கான தேவைகளுக்காககவும் அலைய வேண்டியருக்கிறது<br />
சிறையிலுள்ள பிள்ளைகளின் விடுலைக்காக சிறப்பு முகாகளுக்கும் சிறைகளுக்கும் இவர்களே பெரும்பாலும் செல்ல வேண்டியிருக்கிறது.</p>
<p><span id="more-324"></span>வீட்டைப்புனரமைப்பது ,நிவாரணம் மற்றும் கடன்களுக்காக இவர்களே அலைகிறார்கள். குடும்பத்திற்கு வருமானத்தைப் பெறுவதற்காக அன்றாட உழைப்பிலும் இவர்களே ஈடுபட வேண்டியிருக்கிறது.<br />
கடந்த 30 வருட வன்முறை மயப்பட்ட சூழல் ,அதற்குப் பிந்திய  சூழலில் கூடுதலாகப் பாதிக்கபட்டவர்கள் பெண்களே.<br />
வீடுகள் தனிமைத்துவங்கள் இழக்கப்பட்டதால் அசௌகரியங்களை எதிர்நோக்குபவர்கள் பெண்களே.<br />
தனிமை, சமூகப்பாதுகாப்பின்மை என்பன எமது சமூகத்தில் மிக மோசமான பிரச்சனைகளாகும்.<br />
மத்திய கிழக்கிலும், மேற்காசியாவிலும் வேலைக்குச் சென்ற பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் நாளாந்தச் செய்திகள் ஆகிவிட்டன.<br />
சவுதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர் நோக்கி நிற்கும் மூதூர் சபீனா நாபிக் சிறுமியாக கைதுசெய்யப்பட்டு செய்யாத குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு பல வருடங்களாக சிறை வாசம் அனுபவித்து வருகிறார். சவுதி அரேபியாவின் மானிடதர்மங்களற்ற அந்தக நீதிதிதுறையோ, அரசோ உலக மனிதாபிமானக் குரலுக்கோ அல்லது பகுத்தறிவு, உண்மைக்கோ செவிசாய்ப்பதாக இல்லை. மாத்தறையைச் சேர்ந்த இன்னொரு பெண்ணுகோ சிலுவை சுமந்த யேசுவிற்கு நடந்த கொடுமைகளை விட அதிகமாக கொடுமைகள் நடந்துள்ளன.<br />
அவருக்கு வேலை வழங்கியவன் அவரின் உடல் முழுவதும் இரும்பாணிகளைச் செலுத்தியுள்ளான். பாலியல் வன்முறை சித்திரவதைகளுக்குள்ளான பெண்களும், பலசநதர்ப்பங்களில் கொல்லபட்ட பெண்களின் சவப்பெட்டிகளும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்குவது சர்வ சாதாரணமாகி வருகிறது.<br />
அரசியல் சண்டியர்கள் பெண்கள் மீது நடத்தும் தூற்றுதல் அவதூறுகள் வன்முறைகள் என்பவற்றுக்கும் குறைவில்லை.<br />
ஊடகத்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் பலருக்கு ஞாபகமிருக்கும். அரசியலிலும் சினிமாவிலும் பிரபலமான பெண் ஒருவர் அண்மையில் உயிராத்தை விளைவிக்கும் விதமாக அவரின் தலையில் அவரது கணவரால் தாக்கப்பட்டுள்ளார்.<br />
யுத்த சூழ்நிலையில் திருமணம் செய்ய நிர்பந்திக்கபட்டவர்கள் பலாத்காரமாக பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் பெண்களும் சிறுமிகளுமாகவே காணப்படுகின்றனர். சில சிறுமிகள் தமது அவலத்தைப்பற்றி பங்கர்கள் காப்பரண்களிலிருந்து எழுதிய கடிதங்கள் மன அதிர்ச்சியை ஏற்படுத்துபவை.<br />
1930 களில் சர்வசன வாக்குரிமை வழங்கப்பெற்ற நாடாக இலங்கை இருப்பினும் தீர்மானம் எடுப்பதற்கான நிலைகளில் அரசியலில் பெண்களின் பங்காற்றல் குறைவாகவே இருக்கிறது.<br />
வவுனியா யாழப்;பாணம் கிளிநொச்சி மாவட்டசெயலாளர்களாக பெண்களே இருக்கிறார்கள்<br />
எனினும், இலங்கையில் ஒட்டு மொத்த   சமூக நிலைகளிலும் ஆணாதிக்க நிலைகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. பின்நோக்கிய நிலையே காணப்படுகிறது. வன்முறைகள் அதிகரித்துள்ளன.<br />
யுத்தம் ,தேசிய விடுதலை  இயக்கம் என்பவற்றால் பெண்களின் நிலையில் மாறுதல் ஏதும் ஏற்பட்டு விடவில்லை.<br />
தேசிய விடுதலை இயக்கம் பாசிசமாக உருத்திரிபடைந்தபோது ஜனநாயக இயத்தினுள் செயற்பட்ட பெண்கள் கொல்லபட்டதோடு தெருவுக்கு விரட்டப்பட்டார்கள். அவர்கள் கால  வெளியில் உருவானகறுப்பு வெற்றிடத்தில் இழுக்கபட்டு உருவழிந்து போனார்கள.; தனது யுத்த யந்திரத்தேவைக்காக பாசிசம் பெண்களை தற்கொலை குண்டுதாரிகளாகவும் ,துப்பாகிதாரிகளாகவும் அணிதிரட்டியது.. பல சந்தர்பங்களில் பலவந்தம் செய்தது- ஈவிரக்கமற்ற கட்டாய ஆட் சேர்ப்பு முறையாக. இதன் விபரித விளைவு பேரினவாதம் பாலியல் பலாத்காரம், ஆட்கடத்தல் உட்பட பெண்ளுக்கெதிரான வன்முறை கட்டவிழ்த்து விட்டது.<br />
தவிர எமது சமூகத்தில நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுடன் குறிப்பாக கிராமியத்தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் பேரினவாத ஒடுக்குமுறைகளுடன் மேலதிக சுமைகளைச் சுமந்தார்கள். யுத்தத்திலும் இந்த விழிம்பு நிலை பெண்களே பெருமளவுக்கு ஈடுபடுத்தப்பட்டார்கள். பெருமளவற்கு பிள்ளைகளின் இழப்பையும், வன்முறையையும் சந்தித்தார்கள். இது முழு வடக்குகிழக்கிற்கும் பொதுவானது.<br />
தவிர எல்லையோரக்கிராமங்களில் வாழ்ந்த பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அடிக்கடி வன்முறை தாக்குதல்களை எதிர் கொண்டார்கள்.  பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளானார்கள்;. இவர்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றிய யதார்த்த சினிமாக்கள் வெளிவந்துள்ளன.<br />
காணாமல் போதல் யுத்தத்தில் பிள்ளைகளைப் பலிகொடுத்தல் என்பன தமி;ழ் சிங்கள சமூங்களிடையே பாரிய அளவில் நடந்துள்ளது.<br />
உடுத்த துணியுடன்  விரட்டப்பட்ட வடபகுதி முஸ்லீம் பெண்கள் புத்தளத்திலும் அனுரதபுரம் போன்ற பகுதிகளிலும் அனுபவித்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.<br />
இந்த 3 வருடங்களும் நிகழ்ந்த  இடம்பெயர்வு வங்க கடலை கடந்து அகதிகளாகச் செல்கையில் இறந்தவர்கள் அதிகமாக பெணகளும் குழந்தைகளுமே.<br />
சுனாமி அனர்த்தம், கிழக்கு- தெற்கு- வடக்கு கரையோரங்களிலும் இந்தோனேசியா இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் பெருமளவிற்கு பெண்களையே காவு கொண்டது. எமது கரையோரச்சமூகங்களில் பாரிய அளவில் வெற்றிடம் ஒன்றைத்தோற்றுவித்துள்ளது. </p>
<p>மூதூர் மட்டக்களப்பு வன்னி இடம்பெயர்வுகளில் அகதி முகாம்களில் பெண்கள் அனுபவித்த துன்பங்கள் அளிவிடமுடியாதவை.</p>
<p>அவர்கள் யுத்தத்;தின் போதும் இடம்பெயர்வுகளின்போதும், சிறை சித்திரவதை முகாம்களிலும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துன்பங்களை அனுபவித்தார்கள்.</p>
<p>யுத்தம் ஓய்ந்த பின்னர் புதிய வடிவங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் உருவாகியிருக்கின்றன. வன்முறையின் சாயல்கள் எமது சமூகத்திலிருந்து ஓய்ந்துவிடவில்லை. தற்போது நிகழும் ஆட்கடத்தல் காணாமல் போதலிலும் பெண்களே பெருமளவில் இலக்காகிறாhர்கள.;<br />
திருமணம் என்பது மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் முக்கிய நிகழ்ச்சி .ஆனால் ஆணாதிக்க நிலையை  வலியுறுத்தும் சடங்காசாரங்கள் இன்று பெரும் எடுப்பிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.</p>
<p>பூப்புனித நீராட்டு விழா என்று சிறப்பு அழைப்பிதழ்கள்  அச்சடிக்கபடுகின்றன. மனித உடலில் நிகழும் இயற்கை மாறுதல்களுக்கு விழா எடுப்பவர்கள் உலகத்தமிழர். கேட்க சற்று வெட்கமாகத்தான் இருக்கிறது.<br />
 எமது சமூகத்தின் தாரதம்மியத்தை உணர்த்துவதாக இவை அமைந்துள்ளன.<br />
ஒரு கடைந்தெடுத்த பிற்போக்கு உணர்வுநிலைமட்டம் காணப்படுகிறது.</p>
<p>எட்டுத்திக்கும் சென்றிருந்தாலும் பாமரராய் ,விலங்குகளாய் வாழ்கிறோம்.<br />
 கல்வி. தொழில் ஆகிய விடயங்களில் ஆண்களை விஞ்சிய நிலையில் பெண்கள் இருந்தாலும் சடங்காசாரங்கள் சம்பிருதாயங்கள் அவர்கள் மீது அடிமை உடைமைப்பிரகடனம் செய்கின்றன. வாழ்க்கையின் ஏணிப்படிகளில் அவர்கள் மேலே வருவதற்கு அவர்கள் பல சவால்களைச் சந்திக்கவேண்டியருக்கிறது.<br />
 தகவல்தொழில் நுட்பம் மல்டி மீடியாக்கள் போன்ற வசதிகள் பெண்களை ஆபாசமாகச் சித்தரிப்பதிலும் பிளக் மெயில்;;; செய்வதிலும் பயன் படுகின்றன.<br />
குறிப்பாக தமிழ் சூழலில் மெகா தொடர்களும், சினிமாவும் பெருமளவுக்கு பெண்களுக்கெதிரான வன்முறைகளை நியாயப்படுத்துகின்றன. அடங்கிப்போதல் .பொறுமை என்ற மந்திர உச்சாடனங்களைச் செய்கின்றன. எத்தகைய வன்முறைகளையெல்லாம் பெண்களுக் கெதிராக பிரயோகிக்கலாம் என்ற புதிய புதிய கண்டு பிடிப்புக்களை எல்லாம் செய்கின்றன.. பெண்களைப்பற்றிய ஒரு பாசிச மன நிலையுடன் இவை செயற்படுகின்றன. ஆனால் தமிழ் பெண்களில் ஒரு பகுதியினர்; உலகளாவிய அளவில் இந்த மெகாத்தொடர் போதையில் கிறங்கி கிடக்கிறார்கள்.<br />
ஒருசில விதிவிலக்குள் இருக்கின்றன. அங்காடித்தெரு திரைப்படம் நகர்ப்புற ஜவுளிக்கடைகளில் வேலை செய்யும் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றிய அதிர்ச்சியான செய்தியை எமக்களிக்கிறது.<br />
பெரும்பாலானவை அடி. உதை, படுகொலை, சகித்துப்போ என்பது போல்தான் இருக்கின்றன. பாதகம் செய்பவரை கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழந்து விடு பாப்பா என்பது போல் விடயங்கள் இல்லை.<br />
யதார்தத்தை பிரதிபலிப்பதாகக் கூறி இந்த தொடர் தயாரிப்பாளர்கள் முடிவற்ற வன்முறையை சித்தரிக்கிறார்கள்.<br />
இதுவே சமூக நியதி என மனதில் பதிய வைக்கப்படுகிறது.<br />
பெண்களைப்போகப் பொருளாக சித்தரிக்கும் போக்கு உலகமயமாக்கலுடன் முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு மோசமடைந்துள்ளது</p>
<p>தமிழில் மட்டரகமான ஆண் மேலாதிக்கம் கொண்ட  இரட்டை அர்த்தப்பாடல்கள் ,குரூர நகைச்சுவைகள் அதிகரித்துள்ளன.<br />
உயிரியல் தொழில் நுட்பத்தை வைத்து பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கருவிலேயே தீர்மானித்து அழித்து விடும் போக்குள் அதிகரித்துள்ளன.<br />
ராஜம் கிருஸ்ணனின் மண்ணகத்துப் பூந்தளிர்கள் நாவலில் வரும் கள்ளிப்பால் பருக்குவது, மூக்கினுள் நெல்மணியைச் செலுத்துல் எல்லாம் மாறி பெண் குழந்தைகளை கருவறுக்கும் செயற்பாடுகள அதிகரித்துள்ளன.<br />
தமிழ் சமூகத்தில் பெண்களின் பண்பாட்டு புரட்சி ஒன்று தேவைப்படுகிறது. அதுவும் ஒரு சமூக இயக்கமாக முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும்.</p>
<p>இந்த விடயத்தல் தமிழர்கள் மத்தியில் நிலவும் ஆதிக்க கருத்துக்கள் மிகவும் கயமைத்தனம் நிறைந்ததும் நயவஞ்சகத்தனமானது என்பதிலும் எதுவித ஐயமும் இல்லை.<br />
ஆதனால் தான் வரலாற்று வெளிப்பாடாக தந்தை பெரியார் தோன்றினார். தந்தை பெரியாரின் முனைப்பான போராட்டம் சாதியமைப்பு பெண்ணடிமைத்தனம் இவற்றுக்கெதிராகவே.<br />
திராவிடப்பேரியக்கம் இருந்த சூழலில் தமிழகத்தில் ஜனரஞ்சக சினிமாவில் எங்காவது பெரியாரின் சுயமரியாதை திருமணத்தைப் பார்த்திருக்கி;றீர்களா?<br />
பட்டிதொட்டியெல்லாம் பெரியார் இயக்கம் நடத்தியே அதனைச்செய்யமுடியவில்லையே.</p>
<p>பெண்கள் பலதுறைகளில் சவால்களுக்கு மத்தியில் முன்னேறி இருந்தாலும் .பெண்கள் இரண்டாம் பட்சமானவர்கள் அவர்களை இரட்சிக்க கதாநாயகர்கள் தேவை என்றெல்லவா வலியுறுத்தப்படுகிறது.<br />
பெண்களின் சுதந்திரதிற்கான இயக்கம் ஒரு தொடர் போராட்டமாகும்.<br />
பொருளாதார சமத்தும் கல்வி என்பன இங்கு முக்கியமான விடயங்கள்.<br />
இன்று பெருமளவிற்கு ஊதியமில்லாத உழைப்பாளர்கள் கீழைத்தேசத்துப் பெண்களே.<br />
குடும்ப உழைப்பிற்காக பெண்களுக்கு எதுவும் தரப்படுவதில்லை.<br />
வன்முறையற்ற சமூக ச+ழல், சட்டங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கெதிராக மாற்றம் கொண்டு வருதல், மரபுரீதியான சம்பிருதாயங்கள் தழைகளிலிருந்து விடுதலை சமூகப்பாதுகாப்பு கல்வி உத்தரவாதம் என்பன இங்கு முக்கியமான விடயங்கள். </p>
<p>இந்தியாவில் பெண்களுக்குமேல் ஆண்கள் புரியும் அத்துமீறல்களுக்கெதிராக அண்மையி;ல் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.<br />
மகளிர் காவல்நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.<br />
இலங்கையிலும் இத்தகைய அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன.</p>
<p>தமிழ் அரசியல் அரங்கைப்பொறுத்தவரை அதில் எத்தனை பெண்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை வைத்தே தமிழ் அரசியலின் தார்மீகத்தனத்தை நாம் புரிந்து கொள்ளமுடியும் </p>
<p>மிகவும் வளாச்;சியடைந்ததாகச் சொல்லப்படும் நாடுகளில் கூட மிகவும் விகாரமான முறையில் பெண்களி மீது வன்முறை பிரயோகிக்கப்படுவதை நாம் பார்க்க முடியும்.<br />
அமெரிக்காவில் பாடசாலை சிறுமியை 20 வருடங்களுக்கு முன்னர் கடத்தி பாலியல் பலாத்காரம் புரிந்ததையும் ,இவ்வளவு காலமும் அச்சிறுமியை வீட்டினுள்ளே சிறைவைத்திருந்ததையும,; பொலிசார் அண்மையில் தான் அப்பெண்ணை மீட்ட செய்தியையும் இது போன்ற பல வக்கிர குரூர வன்முறைகளையும் கேள்விப்பட்டிருக்றோம்.</p>
<p>மத ஒழுக்கத்தின பெயரில் மரபுகளின் பெயரில் ஒழுக்கத்ததை மீறியதாக  பெண்கள் மீது பலர் பலாத்காரம் புரிந்தசெய்திகளையும் நிர்வாண ஊர்வலங்கள் நடத்தபட்ட செய்தியையும் நாம் அடிக்கடி கேளிவிப்படுகிறோம் இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக் உடனடியாக சட்டம் ஆதரவாக இல்லை சமூகமும் ஆதரவாக இல்லை. பாகிஸ்தானில் இத்தகைய சம்பவங்களை அடிக்கடி ளே;விப்படுகிறோம்.<br />
அன்றாடம் லட்சக்கணக்கான பெண்கள் உலகளாவிய அளவில் துன்புறுத்ல்களுக்குளாகிறார்கள.<br />
அங்சாங்சுஜி மியன்மார் மக்களின் மனங்கலந்த ஜனநாயக இயக்கத்தின் தலைவி.<br />
மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்கள் உலகமே எதிர்த்துநின்றபோதும் அவருக்கெதிரான அச்சுறுத்தல்களை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.</p>
<p>எனினும் ஒருகாலத்தில் இடதுசாரி இயக்கத்தின் கெரில்லாப் போராட்டக்காரர் இராணுவ சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்தவர் டில்மா பிறேசிலின் ஜனாதிபதியாகியிருக்கிறார். </p>
<p>ஒடுக்கபட்ட சமூகப் பின் புலத்தில் வந்த மீரா குமார் இந்தியாவின் சபாநாயகர் ஆகியிருக்கிறார்.<br />
ஆனால் உலகில் பால் நிலை சமத்துவம் வேண்டி நெடுந்தூரப் பயணமொன்றை மேற்கொள்ளவேண்டியருக்கிறது. </p>
<p>பெண்களுக்கு 30 வீத நாடாளுமனற் ஒதுகீடு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.<br />
இலங்கையில் 2வீதமான பெண்கள கூட பாராளுமன்றத்தில் இல்லை என்பது வேறு கதை.<br />
சமூக பொளாதார வாழ்விலும் அரசியலிலும் சம பங்குதாரர்கள் ஆவதற்கான அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தாகவேண்டும்.<br />
ஆபிரிக்க ,ஆரேபிய நாடுகளில் நிகழும் கிளர்ச்சிகளில் குறிப்பாக எகிப்தில் நடத்தப்பட்ட ஜனநாயகப் பேரியக்கத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது.<br />
அந்த எழுச்சிகள் மத அடிப்படைவாதத்தை கொண்டிருக்கவில்லை.<br />
பெங்களுரில் இரவு உணவு விடுதிக்குச் சென்ற பெண்கள் தாக்கப்பட்டதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.<br />
இந்த காட்டுமிராண்டித்தனத்தை இந்தியாவின் அனைத்து ஊடகங்களுமே கண்டித்தன. </p>
<p>பிரேமனந்தா வகையறா போலிச்சாமியார்களின் பெண்களை இழிவு படுத்தும் சித்து விளையாட்டுகளுக்கெதிராகவும் பாரிய இயக்கங்கள் நடத்தப்படுகின்றன.</p>
<p>இலங்கையின் ஆடைத்தொழில் துறையில் ஈடுபட்டிருக்கும் குறைந்தகூலி பெறும் பெண்தொழிலாளர் பட்டாளத்தின் நிலையும் ,மலையகத் தோட்டத் தொழிலாள பெண்களின் நிலையும் இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். இவர்களின் வாழ்க்கை தரம் இலங்கையின் சராசரி வாழ்க்கை தரத்தை விட கீழானது. வீடு, தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் கல்வியின்மை, போசாக்கன்மை என்பன இங்கு பாரிய பிரச்னைகள் </p>
<p>தொழிற்சாலைகளில் வங்கிகளில் ஏன் ஆஸ்பத்திரிகளில் ஏன் போக்குவரத்தில் பெண்கள்மீதான பாலியல் சார்ந்த துஸ்பிரயோகங்கள் அதிகமாகவே நடைபெறுகின்றன.<br />
இதனை பல சந்தர்பங்களில் நேரிடையாகவே அவதானிக்கமுடியும்<br />
இதை விட யாழ்ப்பாணத்தல் அரச அலுவலகங்கிளில் வேலைசெய்யும் பெண்கள் சேலை அணியவேண்டும் என்று அரசாஙக அதிபர் சொன்னதாக ஒரு செய்தி இதற்கு முன்னர் நல்லூர் கோயிலுக்குவரும் பெண்கள் சேலை அணிந்து வரவேண்டும் என்று மாநகரசபை முதல்வரால் அறிவுறுத்தப்பட்டு அது ரத்துச்செய்யப்பட்டது. இவ்வாறான கருத்துக்கள் ஒருவருடைய உடைத்தேர்வு தொடர்பான ஜனநாயகப் பிரச்சனையாகும.; தென்னாசியாவில் 30 வீத்ததிற்கு மேற்பட்டபெண்கள் சுரி;தார் அணிகிறார்கள் அவர்களை நிந்தனை செய்வதுமாகும் .<br />
ஆண்களின் அத்துமீறலுக்கு காரணம் பெண்களின் நடைஉடைபாவனைகளே என்ற பத்தாம் பசலி ஆணாதிக்க எண்ணப்பாடு இன்றளவில் எமது சமூகத்தில் நின்று நிலவுகிறது.<br />
பெண்கள் தொடர்பாக எமது சிந்தனன முறையிலும் ,சமூகச்செயற்பாடுகளிலும் மாற்றங்கள் தேவை.<br />
அதற்கு சுதந்திரமான பிரக்ஞையுள்ள பெண்கள் இயக்கங்கள் தோன்ற வேண்டும். .இப்போது சில பெண்கள் நலன்சார்ந்த அரசார்பற்ற அமைப்புகள் இயங்குகின்றன. அவை மாத்திரம் போதாது. வரலாற்றின் தேவை இது<br />
 -சுகு-</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kannoddam.com/wordpress/?feed=rss2&#038;p=324</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>TNA கூசாமல் உதார் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்: சுல்தானின் மேய்ச்சல் வெளியிலிருந்து&#8230;</title>
		<link>http://www.kannoddam.com/wordpress/?p=322</link>
		<comments>http://www.kannoddam.com/wordpress/?p=322#comments</comments>
		<pubDate>Sun, 06 Mar 2011 15:18:15 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.kannoddam.com/wordpress/?p=322</guid>
		<description><![CDATA[(நன்றி &#8211; தினமுரசு) “தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் நாங்கள்தான் எண்டதை வாக்களிப்பில் காட்டுங்கள். மகிந்தவை வெருட்டி தீர்வை வெண்டு தாறம்” என்றுதான் இப்போதும் கூசாமல் உதார் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் கூட்டமைப்பினர். கிடைக்கச் சாத்தியமான தீர்வைப் பற்றிப் பேசுவார்களா? அல்லது மகிந்தவை வெருட்டிச் சம்மதிக்க வைக்கும் விண்ணாணம் எதையேனும் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களா? புலிகள் வீழ்ந்து இரண்டு வருடமாகிறதே…. மக்களின் அல்லல்களை மேலும் நீடிக்க விடாமல் அவர்கள் மீளும் வழியை விரைவுபடுத்த இவர்கள் செய்த முன்முயற்சிகள் என்னென்ன? என்று யோசித்தால்,]]></description>
			<content:encoded><![CDATA[<p>(<strong>நன்றி &#8211; தினமுரசு</strong>)<br />
“தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் நாங்கள்தான் எண்டதை வாக்களிப்பில் காட்டுங்கள். மகிந்தவை வெருட்டி தீர்வை வெண்டு தாறம்” என்றுதான் இப்போதும் கூசாமல் உதார் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் கூட்டமைப்பினர். கிடைக்கச் சாத்தியமான தீர்வைப் பற்றிப் பேசுவார்களா? அல்லது மகிந்தவை வெருட்டிச் சம்மதிக்க வைக்கும் விண்ணாணம் எதையேனும் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களா?<br />
புலிகள் வீழ்ந்து இரண்டு வருடமாகிறதே…. மக்களின் அல்லல்களை மேலும் நீடிக்க விடாமல் அவர்கள் மீளும் வழியை விரைவுபடுத்த இவர்கள் செய்த முன்முயற்சிகள் என்னென்ன? என்று யோசித்தால், சில வீரவசனங்களும்…. வெளிநாட்டுப் பயணங்களும்…. பழைய பெருங்காய டப்பா எதிர்ப்பறிக்கைகளும்…. சனத்தைப் பொய்யான கனவுகளில் மிதத்திப் போட்டுச் சரித்த ‘தேசத்தந்தை’ முடிந்தார், இனி அவர் தாயை வைத்தாவது உணர்ச்சியேத்தலாமா என்று ஓடிய நாடகமும்தான் ஈராண்டுச் சாதனையாக எஞ்சுகின்றன! பதவி என்று வந்துவிட்டால் முன்னாள் புலியெதிர்ப்புப் போராளிகளுக்கும்தான் திடீரெனப் பார்வதியம்மா மீது எவ்வளவு பாசக்கதறல் வருகிறது!<br />
<span id="more-322"></span>இன்னல்கள் நீங்கிவிட்டால் மக்கள் அரச எதிர்ப்பை மறந்துவிடுவார்களே என்ற பதற்றமே இன்னமும் இவர்களது ஒரே அரசியலாகத் தொடர்வதை என்னவென்று சொல்ல? மக்கள் படும் கஷ்டங்களை நீக்குவதற்காக, தங்களது எந்தவொரு வீம்பையும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லாத மேட்டுக்குடி அரசியலிலேயே இவர்கள் திளைத்து வருகிறார்கள். ஏதாவது விந்தையால் தீர்வு வந்துவிடுமென்று வீரவசனங்களைப் பேசிக் காத்திருக்க இவர்களது இழப்பில்லா நோவில்லா வாழ்நிலை இடமளிக்கலாம். ஆனால், போரினால் இழந்தவைகளை மீளப்பெற்றுத் தங்கள் இயல்பு வாழ்வை அடைந்துவிட முடியுமா என்ற ஏக்கத்துடன் உலைபவர்களுக்கு இவர்களது ‘விந்தை நினைவுகள்’ உணவாகாது@ வீடாகாது@ தொழிலாகாது@ நிம்மதியுமாகாது. அவர்களது கஷ்டங்களினால் உண்டான விரக்தியையும் கோபத்தையும் வெறுப்பையும் தவறான வழியில் அரசியலாக்கிப் பிழைக்கும் கொழுப்பே இதுவாகும்.<br />
சிங்கள அரசுக்குச் சவால் விட்டபடி, அவர்களைப் பணியவைக்கும் காலத்திற்காகக் காத்திருக்க, போருக்குத் தப்பி ‘வாழ்ந்திருக்க’ முடிந்த சிலருக்கு முடியுமாக இருக்கலாம். ஆனால், போருக்குள் சிக்கவைக்கப்பட்டு நொந்தலையும் சாதாரண மக்களுக்கு இன்றைய உடனடித் தேவைகளே பெரும் ஏக்கமாக இருக்கிறது. யாருடைய வாழ்வை அழித்து யார் வீம்பு கொள்வது?<br />
ஒரு ஸென் கதை: பலகாலமாகத் தன்னை வருத்திப் பயிற்சி செய்து தண்ணீரின் மேல் நடக்கும் விந்தையைக் கற்றுக் கொண்டார் ஒரு துறவி. இறுதியில் எப்படியோ தனது இலட்சியம் கைகூடிவிட்ட திருப்தியை வெளிப்படுத்தி நீரின் மேல் நடந்து காட்டி பெருமையடித்துக் கொண்டார். கரையிலிருந்த மற்றொரு துறவியின் சீடன், இந்த விந்தையைப் பார்த்துவிட்டுக் கேட்டான். “குருவே, உங்களிடம் இதுபோல விந்தை ஏதும் இல்லையா?” துறவி சிரித்தார். “ஏன் இல்லை? என்னிடம் ஒன்றல்ல மூன்று விந்தைகள் இருக்கின்றன” என்றார். “அப்படியா?” என்று ஆவல் தாங்கமாட்டாமல் கேட்டான் சீடன். “எனக்கு தாகம் ஏற்படும்போது தண்ணீர் குடித்தால் அடங்கி விடுகிறது. இது முதல் விந்தை. பசியெடுக்கும்போது சாப்பிட்டால் பசி அடங்கி விடுகிறது. இது இரண்டாம் விந்தை. இதையெல்லாம் விடப் பெரிய விந்தை தூக்கம் வந்தால் படுத்தவுடன் உறக்கம் கூடிவிடுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடிவதேயில்லை.”<br />
அற்புதங்களுக்குக் காத்திருக்கச் சொல்வதை விட அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்து அந்த விந்தையைக் கண்டுகொள்ளச் சொல்லும் கதை அது. எதிர்காலத்துக்கான இன்சூரன்ஸ் ஏற்பாடுகளைச் சொல்லிக் கொண்டிருப்பது, நமது இன்றைய வாழ்வை வலிந்து வதைபட விடும் ஏமாற்றாக நீடிக்க அனுமதிக்கக் கூடாது. நாம் மீள்வதற்கான வழிகளை அடைத்தபடியே சுயவிருப்ப வீம்பு அரசியலைத் தொடர்ந்து நடத்தும் வீரப் பாவனைகளை இனி நாம் நிறுத்த வேண்டும்.<br />
நொந்த மக்களை உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்குள் தள்ளிவிடும் இலகுவான அரசியலையே தேர்தல் வாக்குகளுக்காகச் செய்கிறீர்கள். புண்பட்ட மனங்கள் வெறுப்பை எளிதில் வாங்கிக் கொள்கின்றன. செயற்கையான வீராவேசப் பேச்சுத் துப்பல்களில் மயங்கி சமூகம் பிழையான திசையில் இழுத்துச் செல்லப்பட அனுமதித்தோம். விளைவை அனுபவித்தோம். ஆவேசத்தால் அழிவுகளை உருவாக்கிப் பின் அந்த அழிவுகளால் ஆவேசத்தை வளர்த்து மேலும் மிகையழிவு தேடி…. என்னும் இந்தச் சுழலிலிருந்து இனி நாம் விடுபட வேண்டும்.<br />
வெறுப்பில் இருந்து ஆக்கபூர்வமாக எதுவும் உருவாகாது. அது உடனடியாக வன்முறை அரசியலாளர்களின் கைக்கு ஆயுதமாகச் சென்றுவிடும். பிறகு அதிலிருந்து மீள்வதற்கான போராட்டமே மிகக் கடுமையானதாக மாறிவிடும். அரசியல் தேவைகளுக்காக உருவாக்கி வளர்க்கப்படும் வெறுப்பு, வரலாற்றில் மிகப்பெரிய விலையை நம்மிடம் கோரும் என்பதை நாம் அறிந்துகொண்டு விட்டோம்.<br />
வெறுப்பு, நமது குறைகளை நாம் காணமுடியாதபடி மறைத்துவிடுகிறது. நம் குறைகளை இனங்கண்டு களைவதன் மூலமே நம்மை நீதியுள்ள சமூகமாக்கிக் கொள்ள முடியும்@ உலகின் ஆதரவு பெற்ற சமூகமாக முடியும். அதன்பிறகே அநீதிகளை எதிர்த்து நாம் வெற்றி பெறுவதற்கும் வழி கிடைக்கும்.<br />
சுதந்திரத்திற்காக வன்முறையைக் கைக்கொண்ட சமூகங்கள் மேலும் அடிமைத்தனத்தையே அடைந்ததை வரலாறு காட்டுகின்றது. சுயமரியாதைக்காக வன்முறையைக் கைக்கொண்டவர்கள் மேலும் இழிவையே தேடிக்கொண்டதே பாடமாக இருக்கிறது. வன்முறை நம்மிடம் இருப்பதையும் பறித்துவிடும், எதையுமே அளிக்காது என்பதை இன்று நம்மைவிட உணர்ந்தவர்கள் யாரிருக்க முடியும்? ஆனபோதும், வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் பேச்சுக்களுக்கு அப்பால் எதையும் நகர்த்தத் தெரியாதவர்களையே இன்னும் நம் தலைவர்களாக உலாவர விட்டிருக்கிறோம். ஒட்டுமொத்த சமூகத்தையே பாசிஸ மனநிலைக்குள் அமிழ்த்தும் வெற்று வீம்பு ரோச உரையாடல்களே இன்றும் நம் அரசியல் அபத்தமாகத் தொடர்கிறது.<br />
இந்த பாசிஸ மனஉருவாக்கம் பற்றித் தெரிந்துகொள்ள நாம் மீண்டும் மீண்டும் ஒருகால ஜெர்மானிய தேசத்தந்தை, பெருந்தலைவர் அடோல்ப் ஹிட்லர் அவர்களையே வியந்து நாட வேண்டியிருக்கிறது. என்னமாதிரி ஒரு முன்னோடித் தேசியத் தலைவர் அவர்!<br />
ஹிட்லரை உளவியல் அடிப்படையில் ஆராய்ந்து ‘பாசிஸமும் பொதுமக்கள் உளவியலும்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவரான வில்ஹெல்ம் ரீஷ், ஹிட்லரின் மேடைப்பேச்சு பற்றி குறிப்பிட்டுச் சொல்லும் கருத்துக்கள் இவை: “அன்றாட வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகளைத் தவிர்த்து விடுவது அவர் பாணி. அவை ஒருபோதும் மக்கள் திரளைக் கொந்தளிக்க வைப்பதில்லை. கலாசாரம் சார்ந்த விஷயங்களைப் பேசுபொருளாக எடுத்துக் கொள்வதே அவர்களைக் கவரும். அவற்றைக் கனவும் இலட்சியவாதமும் சார்ந்து உச்சப்படுத்துவார் அவர். பொது எதிரியை உருவாக்குவார். சகல தீமைகளுக்கும் அதுவே காரணம் என்பார். அதன்மீது வெறுப்பை உருவாக்கி தீவிரப்படுத்தியபடியே செல்வார்….<br />
மக்களை உணர்ச்சிவசப்படச் செய்யுமாறு பேசத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உரியதாகும் என்பது ஹிட்லரின் வாதம். தனிமனிதனின் சிந்தனைத் திறன், மனசாட்சி ஆகியவற்றை ஊதித்தள்ளிவிட வேண்டும். தனிமனிதர்கள் ஒரு கூட்டமாக ஒன்றிணையும்போது அவர்களின் தனிப்பட்ட அறிவுத்திறன்கள், தர்க்கநியாயங்கள் அனைத்தையும் இழந்து உணர்ச்சிகளால் ஆட்டுவிக்கப்படும் அறிவற்ற ஒற்றைப் பெருங்கும்பலாக ஆகிவிடுகிறார்கள். இந்தக் கும்பல் மனநிலையைக் கையாள்பவர்களுக்கே அதிகாரம் வாய்க்கிறது என்பதே ஹிட்லரின் வரையறுப்பு.”<br />
மக்கள் போற்றிய மாட்சிமை பொருந்திய விறைப்பும் வீறும் கொண்ட தேசியத் தலைவர் ஹிட்லர் நமது ஆசானல்லாமல் வேறென்ன?</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kannoddam.com/wordpress/?feed=rss2&#038;p=322</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சந்திப்புக்கள் இன்னும் ஆழமும், முதிர்ச்சியும், ஈடுபாடும் நிறைந்ததாக ஆகவேண்டும்- பாரிஸ் இலக்கியச்சந்திப்பு பற்றி தோழர் சுகு</title>
		<link>http://www.kannoddam.com/wordpress/?p=315</link>
		<comments>http://www.kannoddam.com/wordpress/?p=315#comments</comments>
		<pubDate>Sat, 05 Mar 2011 09:01:21 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://www.kannoddam.com/wordpress/?p=315</guid>
		<description><![CDATA[38 இலக்கியச் சந்திப்பு பிரான்சின் தலைநகர் பாரிசில் பெப்ரவரி 19,20 ந்திகதிகளில் நடைபெற்றது. 70 இற்கு மேற்பட்டோர் பங்கு கொணடனர். இந்நிகழ்வில் தீண்டாமைக் கொடுமைகள் ,பெண்ஓடுக்குமுறை இனரீதியான முரண்பாடுகள், உறவுகள் ,தன்னினச்சேர்க்கையாளர்கள,; திருநங்கையர் எதிர்நோக்கும் சவால்கள் சூழலியல் சிதைவுகள் வடஆபிரிக்க அரபுக் கிளர்ச்சிகள் பேசப்பட்டன. கட்டுரை,புத்தகம், கவிதை, ஆற்றுகை, ஓவியம் என பலவடிவங்களில் நிகழ்ந்தன. எதற்கும் சர்வரோக நிவாரணிகள் இருப்பதாக பேசப்படவில்லை. உணர்வுகளில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நிகழ்ச்;சியாக இருந்தது. வரண்ட விரக்தியான வன்முறை சூழ் வெளியில் செயற்படும்]]></description>
			<content:encoded><![CDATA[<p><div id="attachment_316" class="wp-caption alignleft" style="width: 160px"><a href="http://www.kannoddam.com/wordpress/wp-content/uploads/2011/03/sugu-Paris-2011.jpg"><img src="http://www.kannoddam.com/wordpress/wp-content/uploads/2011/03/sugu-Paris-2011-150x126.jpg" alt="" title="sugu Paris 2011" width="150" height="126" class="size-thumbnail wp-image-316" /></a><p class="wp-caption-text">சந்திப்புக்கள் இன்னும் ஆழமும், முதிர்ச்சியும், ஈடுபாடும் நிறைந்ததாக ஆகவேண்டும்- </p></div>38 இலக்கியச் சந்திப்பு பிரான்சின் தலைநகர் பாரிசில் பெப்ரவரி 19,20 ந்திகதிகளில் நடைபெற்றது. 70 இற்கு மேற்பட்டோர் பங்கு கொணடனர்.<br />
இந்நிகழ்வில் தீண்டாமைக் கொடுமைகள் ,பெண்ஓடுக்குமுறை இனரீதியான முரண்பாடுகள், உறவுகள் ,தன்னினச்சேர்க்கையாளர்கள,; திருநங்கையர் எதிர்நோக்கும் சவால்கள் சூழலியல் சிதைவுகள் வடஆபிரிக்க அரபுக் கிளர்ச்சிகள் பேசப்பட்டன.<span id="more-315"></span></p>
<p>கட்டுரை,புத்தகம், கவிதை, ஆற்றுகை, ஓவியம் என பலவடிவங்களில் நிகழ்ந்தன.<br />
எதற்கும் சர்வரோக நிவாரணிகள் இருப்பதாக பேசப்படவில்லை.</p>
<p> உணர்வுகளில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நிகழ்ச்;சியாக இருந்தது. வரண்ட விரக்தியான வன்முறை சூழ் வெளியில் செயற்படும் எனக்கு சற்று மன ஆறுதல். நாம் தனிமையில் இல்லை என்ற உணர்வு.</p>
<p>ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் இலங்கையிலும் இந்தியாவிலும் வாழும் சமூகப்பிரக்ஞை உள்ளவர்களின் சங்கமம் அது.<br />
 சகலவிதமான எமது சமூக பத்தாம்பசலித் தனங்களுக்கெதிராக கேள்வி எழுப்பப் பட்டது. வௌ;வேறுபட்ட கருத்துக்களினூடாக மனிதாபிமானம் அங்கு பிரவாகித்தது.<br />
சகலவிதமான சமூகத்தழைகளிலிருந்தும் விடுபடவேண்டும், இங்கு புனித ஏற்பாடென்று எதுவுமில்லை என்ற மானசீகமான உணர்வு அவரவர் கண்ணோட்டதிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது.<br />
வன்முறையற்ற சமூகம் வலியுறுத்தப்பட்டது. வுன்முறைமயப்பட்ட கடந்தகாலமும் நிகழ்காலமும் அகலவேண்டும் என்ற அங்கலாய்ப்பு காணப்பட்டது.</p>
<p>யுத்தம் , வன்முறை ,இயற்கை அனர்த்தங்களால் அனுபவித்ததுன்பங்கள் பலராலும் எடுத்துரைக்கப்பட்டது.<br />
சமூகங்களிடையே புரிதலை ஏற்படுத்துதல் ,கலை, இலக்கியம் சினிமாவினூடான முயற்சிகள் அனுபவங்கள் பரிமாறப்பட்டன.</p>
<p>சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவத்தை வலியுறுத்திய கிளாச்;சிகள் நடைபெற்ற நாட்டின் தலைநகரில் இன்நிகழ்வு நடைபெற்றது சிறப்பு.</p>
<p>மெலிதான சூடான விவாதங்களுக்கிடையே சகோதரத்துவம் நிலவியது.</p>
<p>நாட்டு நிலைமை புலம்பெயர்தளத்தின் கலவைச் சாயல் அனுபவங்களுடன் பரிமாறப்பட்டன. ஐரோப்பா ,வடஅமெரிக்கா, இலங்கை, இந்தியாவிலிருந்து இந்த சங்கமம் நிகழ்ந்தது.</p>
<p>சமூகத்தின் தார்மீகஉணர்வை வலுப்படுத்துபவை இத்கைய நிகழ்ச்சிகளே.<br />
“ஏட்டுத்திக்கும்செல்வோம் கலைச்செல்வங்கள் யாவும் கொணாந்திக்கு சேர்ப்போம” என்ற பாரதியன் வார்த்தைகள் இங்கு யதார்த்தமாகவேண்டும.; எமது உலகளாவிய பலத்தினை சாதகமாக பிரயோகித்தால் அது சமூகத்தின் விமோசனத்திற்கு பாரிய பங்களிப்பாகும் .</p>
<p>இந்த சந்திப்புக்கள் இன்னும் ஆழமும், முதிர்ச்சியும், ஈடுபாடும் நிறைந்ததாக ஆகவேண்டும்..<br />
ஆக்கபூர்வமாக பேசியவற்றை செயற்படுத்துவதற்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.<br />
போருக்குப் பிந்திய புலம்பெயர்தள இடைவெளியில் இன்னும் விரிவாகச்செயற்பட முடியுமா என்று பார்க்கவேண்டும்.<br />
-சுகு-</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kannoddam.com/wordpress/?feed=rss2&#038;p=315</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுல்தானின் வாரந்தர மேய்ச்சல் வெளியிலிருந்து&#8230;&#8230;</title>
		<link>http://www.kannoddam.com/wordpress/?p=295</link>
		<comments>http://www.kannoddam.com/wordpress/?p=295#comments</comments>
		<pubDate>Sun, 20 Feb 2011 21:07:35 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.kannoddam.com/wordpress/?p=295</guid>
		<description><![CDATA[நன்றி - தினமுரசு   தம் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுகையில் முற்போக்கானதாகத் தோற்றப்பாடு கொள்ளும் ஒரு இனக்குழு, தமக்குள்ளேயே இருக்கும் ஏனைய வித்தியாசங்களை ஏற்றுக்கொள்ளாத அல்லது விரும்பாத போது, அதுவும் ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் ஆதிக்க சக்தியாகவே மாறுகிறது.   “நான் ஒரு மாபெருங் கடல். என்னுள் எத்தனையோ முரண்பாடுகள் அமைந்திருக்கின்றன” என்றார் வோல்ட் விட்மன். “நான் முரண்பாடுகளின் மூட்டை” என்று சொன்னார் ஜெயகாந்தன். முரண்படுவது ஒன்றும் விரும்பத் தகாத இயல்பல்ல. பாவத்துக்குரியதோ வெறுத்தொதுக்கப்பட வேண்டியதோ அல்ல. முரண்களும் அவற்றின்]]></description>
			<content:encoded><![CDATA[<div>நன்றி - தினமுரசு  </div>
<div>தம் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுகையில் முற்போக்கானதாகத் தோற்றப்பாடு கொள்ளும் ஒரு இனக்குழு, தமக்குள்ளேயே இருக்கும் ஏனைய வித்தியாசங்களை ஏற்றுக்கொள்ளாத அல்லது விரும்பாத போது, அதுவும் ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் ஆதிக்க சக்தியாகவே மாறுகிறது.</div>
<div><span id="more-295"></span></div>
<p> </p>
<p>“நான் ஒரு மாபெருங் கடல். என்னுள் எத்தனையோ முரண்பாடுகள் அமைந்திருக்கின்றன” என்றார் வோல்ட் விட்மன். “நான் முரண்பாடுகளின் மூட்டை” என்று சொன்னார் ஜெயகாந்தன். முரண்படுவது ஒன்றும் விரும்பத் தகாத இயல்பல்ல. பாவத்துக்குரியதோ வெறுத்தொதுக்கப்பட வேண்டியதோ அல்ல.<br />
முரண்களும் அவற்றின் மோதலும்தான் ‘புதிய’ ஒன்றைத் தோற்றுவிக்கிறது.</p>
<p>முரண்பாடுகளே வளர்ச்சியைக் கொண்டுவருகின்றன. முரண்பாடுகளினால், அவற்றின் இடைவிடாத, ஒன்றையொன்று எதிர்த்த போராட்டத்தினால்தான் சமுதாயம் இயங்கி வந்திருக்கிறது. முரண்பட்ட அம்சங்களே இயக்கத்தை நிகழ்த்தும் ஆற்றல் கொண்டவை.</p>
<p>ஒளி என்பதே இருளினால் அறியப்படுவதுதான். அன்பும் துவேசமும் ஒரு நுட்பமான கண்ணுக்குப் புலப்படாத, மிக மெல்லிய இழையில் ஒன்றுக்கொன்று வேறாக மாறிவிடக் கூடியவை. மிக நெருக்கமாக, உயிருக்குயிராய் பழகும் இருவர் பின்னர் ஒரு கட்டத்தில் ஒருவரையொருவர் கொன்று தீர்த்துக்கொள்ள வெறியுடன் அலைவதை நாம் பார்த்திருக்கிறோம். அவ்வளவு ஏன்? நம் இயக்கங்களிலும், கூட இருந்து முரண்பட்டுப் பிரிந்து போனவர்களே எதிரியை விடப் பயங்கர விரோதத்துக்குரியவர்களாக ஆகியதையும், முதலில் அவர்களையே தீர்த்துக்கட்டி விடும் ‘ஜனநாயக’ உணர்வில் நாம் தழைத்தோங்கியிருந்ததையும் அறிவோம்.<br />
முரண்கள் இயல்பானவை  ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை விவாதித்து முன்னகரத் துணைபுரிபவை. விலகல்களையும் வித்தியாசங்களையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனமே படுகொலைகளுக்கும் போர்களுக்கும் வித்தாகிறது  பாசிசத்தின் தோற்றுவாய் ஆகிறது. மதம், இனம், மொழி, கலாசாரம் என்பவற்றில் தீவிர பற்றும் தற்பாதுகாப்புணர்வும் மேலோங்குகையில் அது மற்றவற்றின் மீதான வெறுப்பாக மாறிவிடும் அபாயம் எப்போதுமிருக்கிறது. இதுபற்றி விரிந்த பார்வை ஏற்படாமல் அதாவது மற்றைய இன, மொழி, மத, கலாசாரங்களைக் கணக்கிலெடுக்காமல், அவைபற்றி ஏதும் அறிந்துகொள்ளாமல் அவற்றை மறுத்து எங்களுடையதை நாம் உயர்த்திப் பிடிக்கையில் அது அடிப்படைவாதமாகிறது.</p>
<p> உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு புள்ளி அளவில் இருந்துகொண்டு நம்முடைய மொழியும் நம்முடைய கலாசாரமுமே சிறந்த மொழியும் கலாசாரமும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அறியாமை – சிறுபிள்ளைத்தனம் ஏற்பட்டுவிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக அதிகாரமும் கிடைத்துவிட்டால் அடுத்த மொழியையும் கலாசாரத்தையும் அழித்தொழிக்கும் முனைப்பும் நம்மிடம் வந்துவிடுகிறது.<br />
தம் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுகையில் முற்போக்கானதாகத் தோற்றப்பாடு கொள்ளும் ஒரு இனக்குழு, தமக்குள்ளேயே இருக்கும் ஏனைய வித்தியாசங்களை ஏற்றுக்கொள்ளாத அல்லது விரும்பாத போது, அதுவும் ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் ஆதிக்க சக்தியாகவே மாறுகிறது.<br />
அந்நிய காலனித்துவத்துக்கெதிராகப் போராடிய நாடு அல்ஜீரியா. பிறகு, அந்த நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கபீலியா என்ற பகுதியில் மக்கள் தங்களுடைய சொந்த மொழியான கபீலிய மொழியைப் பேசினால் அபராதம் விதிக்கப்பட்டது. அல்ஜீரியாவின் ஆட்சிமொழியான அரபி மொழியே பேச வேண்டும் என்று கபீலியர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். தங்கள் மொழிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் அவர்கள் போராடும்படி ஆகியது. அல்ஜீரிய அரசு ஒடுக்குமுறையரசாகியது.</p>
<p>அதுபோலவே, கடும் அடக்குமுறைக்கும் இன ஒடுக்குதலுக்கும் உள்ளான யூதர்கள் பின்பு பிறர்மீது அடக்குமுறையை ஏவ சற்றும் தயங்காத நாடாக உருப்பெற்றிருக்கிறார்கள்.<br />
மற்றவர்களை, அவர்களது இயல்புகளோடும், நம்மிடமிருந்து மாறுபடும் வித்தியாசங்களோடும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதே நாம் பாசிஸ்டுகள் ஆவதன் ஆரம்பப் புள்ளி. நம்மிடமிருந்து வேறுபடுகிறவர்கள் நாமிருக்கும் இந்த உலகில் வாழ்வதற்கு நியாயமில்லை என்று கருதத் தொடங்கி விடுகிறோம்.<br />
<strong>நம்மோடு முரண்படுபவர்களையும் ஒத்துப்போகாதவர்களையும் மிக அதிகளவில் கொண்டதுதான் இந்த உலகம். </strong></p>
<p>அந்தக் கடவுளிலிருந்து ஆரம்பித்து நம் மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், அயலவர்கள் என்று யாரோடும் எதனோடும் நம்மால் முழுமையாக ஒத்துப்போக முடிகிறதா என்ன? ஒத்துப்போகாதவர்களோடுதான் நாம் வாழ வேண்டியிருக்கிறது. ஜெயகாந்தனாயிருக்க வேண்டும்…. சொன்னார்:  “ஒன்றுக்கொன்று மாறுபட்ட ஒழுக்கங்களை ஒழுக்கக்கேடு என்று புரிந்துகொள்வது ஒருவகை தீயொழுக்கம்” என்பதாக.  நமக்கு அப்பாலான எதையும் விரோதமாகப் பார்ப்பதும், அங்கீகரிக்க இயலாமல் அல்லற்படுவதும் நமது சிறுபிள்ளைத்தனமாகுமே தவிர வேறல்ல.</p>
<p> நம்மைப் பற்றியே கூட முழுமையாகத் தெரிந்துகொண்டுவிட முடியாத, நம்முடைய இந்த மிகக் குறைந்த அறிவை வைத்துக்கொண்டு, நம்மைப் பற்றிப் பெருமையாகவும் மற்றவற்றை இழிவாகவும் எண்ணிக்கொள்வதில் என்ன பொருளிருக்கிறது?<br />
நம்மிடமிருக்கும் அறிவே நாம் பெருமைப்படவும் பாராட்டிக்கொள்ளவும் தக்கதுதானா? நம் அறிவால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எதை முழுமையாக அறிந்திருக்கிறோம்? எந்த ஒரு சின்னஞ்சிறு துகளையும் பற்றி என்ன தெரியும் நமக்கு? மறுபக்கத்தில், இந்த அறிவு என்பது அதிகாரமாகவும், மனித சமத்துவத்துக்கு எதிரானதாகவும், அழிவுக்குரிய கருவிகளைத் தேடிக் கொள்வதாகவும், இவற்றின் காரணமாகவே மனிதகுல அழிவுக்கு வழிவகுப்பதாகவும் இருப்பதைக் கண்டுகொண்டிருக்கிறோம்.<br />
அறிவும் அதன் விளைவான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுமே பல தேசங்களையும் பல இனங்களையும் அடிமைப்படுத்திய வரலாறு நமக்குத் தெரியும். ஐரோப்பியர்கள் தென்னமெரிக்கா முழுவதையும் அடிமை கொண்டது அறிவினால்தான் நிகழ்ந்தது.</p>
<p>ஆபிரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு அமெரிக்கக் கண்டத்திற்குக் கொண்டுவரப்பட்டு அடிமைகளாக்கப்பட்டது அறிவினால்தான். மேற்கத்தியர்களிடம் இருந்த நவீன கருவிகளுக்கான அறிவு கீழைத் தேசத்தவனிடம் இல்லாததால்தான் இவன் எளிதில் அவர்களிடம் அடிமைப்பட நேர்ந்தது. அதேபோல, வேதத்தையும் உபநிஷதங்களையும் மனப்பாடமாக்கி வியாக்கியானம் செய்ய அறிந்துகொண்ட குழு, அந்த அறிவைப் பெற்றுக் கொள்ளாதவர்களை அடிமைகளாக்கியதும் அறிவோம்.<br />
ஆயின், எளிதில் தோற்றுப்போய், எதிர்காலத்திற்காக யாரையோ எதையோ எதிர்பார்த்திருக்கும் நாம் எப்படி நம்மைப் புத்திசாலிச் சமூகம் என்று சொல்லிக் கொள்வது? நம் பாடழிவைத் தடுத்துக் கொள்ளத் தெரியாத நாம் எப்படி நம்மை அறிவுச்சமூகம் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்? நடந்து முடிந்த வரலாற்றில் அறிவும் அதனூடான செயற்பாடுகளும் நம் தரப்பில் இல்லாமல் போனதுதானே அவலமுடிவாக அம்பலப்பட்டது!<br />
அதுமட்டுமல்ல, உணர்ச்சிகரமான ஆவேசத்தில் கூட்டப்படும் மக்கள் திரளிடமிருந்து அறிவு பறிக்கப்பட்டு விடுகிறது. உணர்ச்சிகரமாகக் குறுக்கித் தரப்பட்ட நியாயங்களுக்கப்பால் எதையும் யோசி;க்க விடாமல் செய்யப்படுகிறார்கள். அவர்களைத் திரள வைத்த சக்திகளிடம் தம்மை ஒப்படைத்து கோஷங்களினூடாக பகையுணர்வை வளர்த்துக் கொள்கிறார்கள்.</p>
<p>1984ல் டெல்லியில் ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் கொல்லப்பட்டமை, 2002ல் குஜராத் படுகொலைகள், 1983ல் ஜூலைப் படுகொலைகளுக்கெல்லாம் பயன்பட்டது இந்தக் கும்பல் எழுச்சி மனோபாவமே. கூட்டமாகத் திரண்டிருக்கையில் உயிரழிவு பற்றியோ மனித அறங்கள் நீதிகள் பற்றியோ சிந்திக்க முடிவதில்லை.<br />
இதற்கு வெளியே இவர்களை மீறிச் சென்று நன்மை தீமைகளை அலசிப் பார்க்க, மனிதாபிமானத்துடன் சிந்திக்க முயலும் எவரும் இந்தத் திரளுக்கு எதிரான துரோகிகள் எனவே காட்டப்படுவார்கள். இரண்டாம் உலகப் போருக்கு முன் ஜெர்மானிய மக்கள் காட்டியதும், கடந்த இரு தசாப்தங்களாக நம்மவர்கள் காட்டியதும் இதையே என்பதை இன்று யாரும் ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்துகொள்ள முடியும்.<br />
வரலாற்றின் அந்தக் குரூர நாடகத்தையே நாங்களும் திரும்ப நடித்தோம். நாடகம் முடிந்துவிட்டது. இனி நாம் அதுபற்றிப் பேச வேண்டும். வீழ்ச்சி ஏன் என்று விமர்சனம் செய்து அறிந்து மீள வேண்டும். அதைவிடுத்து தொடர்ந்தும் அந்த நாடகத்தையே நடத்தும் பாவனைகளைப் பண்ணிக் கொண்டிருப்பது, நம்மை மீளவிடாமலடிக்கும் அறியாமையும் வஞ்சனையுமே ஆகும்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kannoddam.com/wordpress/?feed=rss2&#038;p=295</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அடையவே முடியாத  மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் கொண்டிருப்பதைவிடவும் &#8230;சாத்தியமான  வழிமுறைகளைக் குறித்துச் சிந்தியுங்கள்</title>
		<link>http://www.kannoddam.com/wordpress/?p=287</link>
		<comments>http://www.kannoddam.com/wordpress/?p=287#comments</comments>
		<pubDate>Sun, 20 Feb 2011 16:15:06 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.kannoddam.com/wordpress/?p=287</guid>
		<description><![CDATA[நன்றி – வீரகேசரி 20- 02- 2011 கிருஷ்ணமூர்த்தி) இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ஏறக்குறைய ஏழு மாதங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் சில அபிப்பிராயங்களை தெரிவித்திருந்தார். 13வது திருத்தச்சட்;டத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக அதிகாரப் பகிர்வுகளை சாத்தியப்படுத்துதல், இநத அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தை சரியான முறையில் செயற்படுத்துதற்கு உடனடியாக ஒரு ஆனைக்குழுவை ஏற்படுத்துதல். இந்த அதிகாரப் பரவலாக்கல் ஆனைக்குழுவில் அரசியல் யாப்பு சம்பந்தமான விடயங்களில் நிபுணத்துவமுடையவர்கள் விடயங்களைத் திறமையாக நிர்வகிக்கக்கூடிய]]></description>
			<content:encoded><![CDATA[<p>நன்றி – வீரகேசரி 20- 02- 2011</p>
<div>கிருஷ்ணமூர்த்தி)</div>
<p><a href="http://www.eprlfnet.com/wp-content/uploads/2011/02/varathan-3.jpg"></a><a href="http://www.kannoddam.com/wordpress/wp-content/uploads/2011/02/varathan-21.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-289" title="varathan 2" src="http://www.kannoddam.com/wordpress/wp-content/uploads/2011/02/varathan-21-150x150.jpg" alt="" width="150" height="150" /></a>இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ஏறக்குறைய ஏழு மாதங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் சில அபிப்பிராயங்களை தெரிவித்திருந்தார்.</p>
<p>13வது திருத்தச்சட்;டத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக அதிகாரப் பகிர்வுகளை சாத்தியப்படுத்துதல், இநத அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தை சரியான முறையில் செயற்படுத்துதற்கு உடனடியாக ஒரு ஆனைக்குழுவை ஏற்படுத்துதல். இந்த அதிகாரப் பரவலாக்கல் ஆனைக்குழுவில் அரசியல் யாப்பு சம்பந்தமான விடயங்களில் நிபுணத்துவமுடையவர்கள் விடயங்களைத் திறமையாக நிர்வகிக்கக்கூடிய திறனாளர்களைக் கொண்ட நிபுணர்குழுவொன்றை அதை;தல் அவசியமாகும் என்பது வரதராஜப்பெருமாளின் சாராம்சக் கருத்தாகும். அடையவே முடியாத  மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் கொண்டிருப்பதைவிடவும் அடைய முடிந்த ஸ்ரீதேவிக்காக  கைகளை நீட்டலாம் என்பதைப் போல் சாத்தியமான  வழிமுறைகளைக் குறித்துச் சிந்தியுங்கள் என்பதாக வரதராஜப் பெருமாள் இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். தன்னுடைய இந்த நிலைப்பாட்டை அவர் இலங்கையில் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பெருமாளின் பிரசன்னம் அதிகளவில் காணப்படுகிறது.<span id="more-287"></span><!--more--></p>
<p> அத்துடன் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று புலம்பெயர் மக்களையும் விடுதலைப் போராட்ட அமைப்புக்களில் திவிரமாக செயற்பட்டிருக்கும் முக்கிய உறுப்பினர்களையும் சந்தித்து தனது நிலைப்பாட்டை விளக்கியிருக்கிறார். வரதராஜப்பெருமாள் இலங்கை அரசியல் களத்தில் நன்றாக அறியப்பட்டவர். வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதல் அமைச்சர். முப்பது ஆண்டுகளுக்கு மேலான அரசியல் செயற்பாடு அனுபவங்களையுடையவர். கல்வியியலாளர். பொருளியல் சிந்தனையாளர். ஆயுதப் போராட்ட அரசியல் அனுபவத்தையும் ஆயுதமற்ற அரசியல் நடவடிக்கைகளின் அனுபவத்தையும் கொண்டவர். இந்தப் பின்புலத்தில் தனது கடந்தகால அரசியல் அனுபவத்தையும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் அனுபவத்தையும் தொகுத்து தனது இன்றைய நிலைப்பாட்டை அவர் உருவாக்கியிருக்கிறார். இதை அவர் பகிரங்கமாகத் தெரியப்படுத்தியும் வருகிறார்.</p>
<p>இதேவேளை வரதihப்பெருமாளை கடுமையாக விமர்சிப்போரும் உள்ளனர். குறிப்பாக இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர் என்றும் இந்திய விரிவாக்கத்துக்கு ஆதரவளிப்பவர் என்றும் பெருமாளை இவர்கள் விமர்சிக்கின்றனர்.</p>
<p>ஆனால் பெருமாளோ தான் கடந்த கால அனுபவங்களின் வழியாகவும் இன்றைய உலக ஒழுங்கின் வழியாகவும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கின்றேன் என்கின்றார். பிரச்சினைக்கான சூழல்  அற்றுப்போனதென்றால் அடுத்த கட்டமாக எது சாத்தியமோ அதைப் பற்றித்தானே நாம் சிந்திக்க வேண்டும்? என்பதுதான் பெருமாளின் தீர்க்கமான நிலைப்பாடு.</p>
<p>இங்கே நாம் வரதராஜப்பெருமாளை முக்கியப்படுத்துவதை தவிர்த்து விட் அவருடைய கூற்றுக்களையும் நிலைப்பாடுகளையும் அவதானிக்கலாம்</p>
<p>தமிழர்கள் இன்று எத்தகைய நிலையில் இருக்கின்றனர்? தமிழ் பேசும் சமூகங்கள் இப்போது எவ்வாறுள்ளன? இந்த இரண்டு கேள்விகளும் முக்கியமானவை. அதாவது அரசியல் ரீதியாசும் சரி, பொருளாதார சமூக இருப்பு நிலையிலும் சரி தமிழர்களும் தமிழ் பேசும் மக்களும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர்.</p>
<p>தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதிதுவப்படுத்தும் அரசியல் சகதிகளில் பலவும் இன்று ஐக்கிய இலங்கைக்குள் தான் அரசியற் தீர்வு என்ற நிலைப்பாட்டுக்கு  வந்துவிட்டன. இந்த நிலைப்பாட்டுடன்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உள்ளது. நாடு கடந்த தமிழீழக் கோட்பாட்டாளர்களைத் தவிர ஏனையோர் அனைவரும் யதார்த்த அரசியலைப் பற்றி சிந்திக்க முற்பட்டுள்ளனர். இந்த யதார்த்த அரசியல் வெளிக்கு அப்பால் நிற்போரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சிறு பிரிவினரும் உள்ளடங்குவர். இத்தகைய பிரிவினர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்று விட்டனர்.</p>
<p>கூட்டமைப்பில் ஓரளவுக்கு யதார்த்தமாகச் சிந்திப்பவர் சுரேஷ் பிதேமச்சந்திரன். ஆனால் அண்மையில் இவர் நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரைகளும் ஊடகங்களுக்கு விடுக்கும் அறிக்கைகளும் யதார்த்த சிந்தனை முறைக்கு அப்பாலானவையாக இருக்கின்றன. கூட்டமைப்புக்குள் இருக்கும் நெருக்கடியைச் சமாளிக்கவும், அந்தக் கட்சியின் அரசியல் இருப்பை உறுதி செய்யவும் சரேஷ் பிரேமச்சந்திரன் முனையலாம்.</p>
<p>ஆனால் அவ்வாறு அவர் முயற்சிப்பாராயின்  அவருடைய அரசியல் வெற்றிகள் என்பதும் அடையாளம் என்பதும் எதிர்காலத்தில் கேள்விக்குறியாகவே அமையலாம். பல மந்தைகளில் ஒன்றாக நிற்பதை விடவும் தனித்து சிங்கமாக இருக்க வேண்டிய அரசியல் தலைமையாளரின் பண்புகளில முக்கியமானது என்பார்கள். இந்த் தனித்துத் தெரிதல் என்பது சிந்தனையையும் செயற்பாட்டாலுமே அமையும்.</p>
<p>சுரேஷ் பிரேமச்சந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல. ஆயுதப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர். நீண்டகால அரசியல் அனுபவத்தையுடையவர். சுக ஊடாடத்திலுள்ளனர். பல்வேறு நெருக்கடி பாதைகளால் பயணித்து வந்தவர்.  ஆகவே நடைமுறைக்குரிய திட்டங்கள் நிலைப்பாடுகள் என்பவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டிய பொறுப்பில் இன்று இவர் இருக்கின்றார். கூட்டமைப்பிலுள்ளோரில் அதிக ஆற்றலும் நம்பிக்கையும் தரக்கூடியவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்தான். தலைமைத்துவப் பண்பு நிறைய பெற்றவரும் அவர்தான்.</p>
<p>எனவே சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று கூட்டமைப்பின் மையச் சுழற்சியைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பிலிருக்கிறார். கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நோய்வாய்ப்பட்டிருப்பதுடன் முதுமை நிலையில் இருக்கின்றார். இதேவேளை சம்பந்தனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் அதிகம் முரண்பாடற்ற நிலைப்பாட்டை உடையவர்கள்.</p>
<p>எனவே இன்றுள்ள நிலையில் தமிழ் பேசும் சமூகங்களின் அரசியற் தீர்வைப் பற்றி சிந்திக்க வேண்டுமாயின் இன்னொரு யதார்த்தத்தையும் மனங்கொள்வது அவசியம். அதாவது தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற் கட்சிகளில் (மலையகம்- முஸ்லீம் தரப்பு மற்றும தமிழ் தரப்பு ஆகியவற்றில்) பெரும்பாலானவை அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றன. அல்லது அரச ஆதரவை கொண்டிருக்கின்றன. டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி, பிள்ளையான் எனும் சிவனேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீனின் அணி, இ.தொ.கா, மலையக மக்கள் முன்னணி, இப்படி பல கட்சிகளும் புலிகளின் பரிவுகள் கே.பி அணியினர் வரையில் அரசு வட்டத்துக்குள் உள்ளடக்கப்பட்டு விட்டன.</p>
<p>ஆனாலும் இந்தத் தரப்பினரில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் தமிழ் பேசும் மக்களின அரசியல் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு- அபிவிருத்தி நடவடிக்கைகள் வரையிலும் செயற்பட்டு வருகின்றன.</p>
<p>ஆகவே இனப்பிரச்சினைக்கான தீர்வு தமிழ் பேசும் சமூகங்களின் அபிவிருத்தி வடக்கு-கிழக்கு பிரதேச மேம்பாடு என்றெல்லாம் பேசப்படும் போது இந்தத் தரப்புக்களும் தமக்குரிய இடத்தைக் கோரும். அத்துடன் பெரும்பாலான தரப்புகள் அரச தரப்பு நிலைப்பாட்டுடன் இருக்கும போது வெளித்தரப்புக்களின் பலமும் நியாயப்பாடுகளும் கேள்விக்குரியதாகவே  காணப்படும்.</p>
<p>விடுதலைப் புலிகள் பலமான நிலையில் இருந்தபோது  முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வேறு. அவர்கள் வெளிப்படுத்திய நிலைப்பாடுகள் வேறு. தாம் தெரிவித்த நிலைப்பாட்டை நோக்கி நகரும் செயற்பாடு முறையைப் புலிகள் கொண்டிருந்தனர். ஆனால் புலிகள் முன் முன்வைத்த தனிநாட்டுக் கோரிக்கை அதற்கான போராட்டம் என்பன இன்று தோல்வி கண்டிருப்பதற்கு புலிகளால் முன்வைத்த உப கோரிக்கைகளே நிறைவேற்றப்படவில்லை.</p>
<p>உதாரணமாக பொருளாதாரத்தடை நீக்கம், கடல் வலயச் சட்டம், சில குறிப்பிட்ட பாதைகளை பொதுமக்களுக்கு திறந்து விடுதல். அரசியல் கைதிகளின் விடுதலை, சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்புக்களை மீள் கட்டமைப்புச் செய்வதற்கான ஒருங்கிணைவு போன்றவற்றிலேயே வெற்றியை காண முடியவில்லை புலிகளால்.</p>
<p>இவ்வாறான ஒரு பின்னணியில் எடு;த்த எடுப்பிலேயே சிங்களத் தரப்பை மீண்டும் கலவரமடைய வைக்கும் இனவாதிகளுக்கு அதிக வாய்ப்பைக் கொடுக்கும் கோரிக்கைகளை தமிழர்கள் முன் வைக்க முடியுமா? அதாவது சமஷ்டி, சுயாட்சி, வடக்கு கிழக்கு இணைப்பு என்ற வகையிலான கோரிக்கைகள் மீண்டும் இனவாதத்தை வளர்க்கவே வாய்ப்பளிக்கும். பிரச்சினையைத் தீர்க்கவோ தமிழ் பேசும் மக்களுக்கு நன்மை பயக்கவோ மாட்டாது.</p>
<p>இதேவேளை தமிழ் பேசும் மக்களுக்கு இவை அடிப்படையானவை. எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க முடியாதவை. எனவே இந்த இரு யதார்த்த நிலைமையில் விடயங்களை புத்திபூர்வமாக கையாள்வது மட்டுமே சாத்தியமான வெற்றிகளைத் தருவதாக இருக்கும்.</p>
<p>இதற்கு மாற்றுச் சொற்கள் மாற்று அணுகுமுறைகளைப் பற்றி சிந்திப்பது அவசியம். அதாவது அடைய முடியாத மகாதேவிக்காக வெற்றி வெளியில் வாளை வீசுவதை விடவும் அடையக்கூடிய ஸ்ரீதேவியை வரவேற்பது கட்டாயமானது.</p>
<p>இன்னும் இனப்பிரச்சினையை நீடிக்க முடியாது. இன்றும் தமிழ் பேசும் மக்களின் துயரங்களும் அவலங்களும் நீடிக்கக் கூடாது. அவ்வாறு அவை நீடிக்குமானால் அதற்குப் பொறுப்பு தமிழ் பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவபடுத்தும் கட்சிகளும் அவற்றின் தலைமையாளர்களும் இவற்றை வழி மொழியும் ஊடகங்களுமே</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kannoddam.com/wordpress/?feed=rss2&#038;p=287</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கிழக்கின் உதயமும் வடக்கின் வசந்தமும்- வெளியீடு 57</title>
		<link>http://www.kannoddam.com/wordpress/?p=271</link>
		<comments>http://www.kannoddam.com/wordpress/?p=271#comments</comments>
		<pubDate>Sat, 19 Feb 2011 17:00:10 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கண்ணோட்டம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.kannoddam.com/wordpress/?p=271</guid>
		<description><![CDATA[2007ம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் சகல பகுதிகளிலிருந்தும் அரச படைகள் புலிகளை முற்றாக துரத்தியது, தோற்கடித்தது 2008ம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து கிழக்கின் உதயம் என்ற பெயரில் யுத்தத்தால் அழிந்து கிடந்த கிழக்கு மாகாணத்தை மிக விரைவாக புனர் நிர்மானம் செய்து மக்களுக்கு புனர்வாழ்வளி ப்பது என்ற அபிவிருத்தித் திட்டத்தை அரசு அறிவித்தது. யுத்தத்தால் இடம்பெயர்ந்த இரண்டு இலட்சத் துக்கு மேற்பட்ட கிழக்கு மக்கள் தத்தம் கிராமங் களுக்கு மீள் குடியேற்றப்பட்டனர். அவர்களுக் கான குடியேற்ற நிவாரணம்]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.kannoddam.com/wordpress/wp-content/uploads/2011/02/kannottam_new_logo-166x65.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-277" title="kannottam_new_logo (166x65)" src="http://www.kannoddam.com/wordpress/wp-content/uploads/2011/02/kannottam_new_logo-166x65-150x65.jpg" alt="" width="150" height="65" /></a>2007ம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் சகல பகுதிகளிலிருந்தும் அரச படைகள் புலிகளை முற்றாக துரத்தியது, தோற்கடித்தது 2008ம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து கிழக்கின் உதயம் என்ற பெயரில் யுத்தத்தால் அழிந்து கிடந்த கிழக்கு மாகாணத்தை மிக விரைவாக புனர் நிர்மானம் செய்து மக்களுக்கு புனர்வாழ்வளி ப்பது என்ற அபிவிருத்தித் திட்டத்தை அரசு அறிவித்தது.<span id="more-271"></span></p>
<p>யுத்தத்தால் இடம்பெயர்ந்த இரண்டு இலட்சத் துக்கு மேற்பட்ட கிழக்கு மக்கள் தத்தம் கிராமங் களுக்கு மீள் குடியேற்றப்பட்டனர். அவர்களுக் கான குடியேற்ற நிவாரணம் மற்றும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சம்பூர் பிரதேசத்தை தவிர கிழக்கின் ஏனைய இடங் களில் எல்லாம் இடம் பெயர்ந்த மக்கள் தத்தம் இடங்களில் குடியேற அனுமதிக்கப்பட்டார்கள். கிழக்கின் கரையோர நெடுஞ்சாலை வீதி புனர மைக்கப்பட்டது. கொழும்பிலிருந்து மட்டக்களப் புக்கு நாளாந்தம் ரயில் ஓடும் நிலையும் உரு வாக்கப்பட்டது. கல்விச் சாலைகள் திருத்தப்பட் டன. வைத்தியசாலைகள் திருத்தப்பட்டன.</p>
<p>மட்டக்களப்பு மாநகர சபைக்கு தேர்தல் நடத் தப்பட்டு அங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சி செயற்படும் நிலைமை ஆக்கப்பட்டது. கிழக்கின் உதயம் என்னும் மஹிந்த திட்டத்தின் மூலம் மேற்குறிப்பிட்ட விடயங்கள் நடந்துள்ளன என்பது மகிழ்ச்சிக்குரியவை தான். ஆனால் அதிருப்தி தரும் பல பக்கங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. மக்களால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபையால் மக்களுக்கு என்ன நன்மை விளைந்துள்ளது. என்றால் குறிப் பிடத்தக்க ஒன்றும் இல்லையென்றே கூற வேண் டியுள்ளது. மட்டக்களப்பில் மக்கள்pன் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா? இல்லை. நகரம் குப்பை கூழங்;கள் இல்லாமல் சுத்தமான நகரமாக இருக்கிறதா? அதுவும் இல்லை. மாநகரத்தில் சிதைந்து கிடக்கும் வீதிகள் திருத்தப்படுகின்றனவா? அப்படியும் இல்லை.</p>
<p>யுத்தத்தால் கிழக்கில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இப்போது மழை வெள்ளத்தால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்கள் பாதுகாப்பாக வீடுகளில் நிம்மதியாக வாழும் நிலையை அடைய இன்னும் எத்த னையோ வேண்டி இருக்கிறது.</p>
<p>கிழக்கு மாகாண மக்களின் விவசாயம், மீன்பிடி, கல்வி, சுகாதாரம், வீதிகளின் அபிவிருத்தி, கிராம மக்களிடையே நிலவும்; வறுமையை ஒழித்தல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குதல், போக்குவரத்து வீதிகளை மேம் படுத்தல் போன்றவற்றிற்க்காகத்தான் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. கிழக்கு மாகாணத் தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை இருக்கிறது. அது பெயருக்குத்தான் இருக்கிறது. தனக்கு எந்த அதிகாரமும் அளிக் கப்படவில்லை எனவும், தனது ஆட்சியிலுள்ள மாகாணசபையிடம் மாகாண அபிவிருத்திக்கான எந்த நிதிவளமும்; இல்லை எனவும் கிழக்கின் முதலமைச்சர் அடிக்கடி பகிரங்கமாகவே கூறு கிறார். அப்படியானால் எதற்காக இந்த மாகாண சபைகளை கொழும்பு ஆட்சியாளர்கள் வைத்தி ருக்கிறார்கள். யாரைத் திருப்திப்படுத்துவதற்காக ஒரு யானையைச் சங்கிலியால் அசைய முடி யாமல் பிணைத்துக் கட்டிவைத்து விட்டு அந்த யானையால் எந்த வித பிரயோசனமும் இல்லை என்று கூறுவது முட்டாள்தனமல்லவா?</p>
<p>கிழக்கில் யுத்தம் முடிந்து இரண்டரை ஆண் டுகள் ஆகிவிட்டன.கிழக்கு மக்களின் வாழ்வில் பொருளாதாரத்தில், சமூக செயற்பாடுகளில் முன்னேற்றங்கள் என்ன? அவர்கள் பாதுகாப் பாகவும், நிம்மதியாகவும், கௌரவமாகவும் வாழுவதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் என்ன? மக்களின் பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், அடிப்படை அரசியல் மற்றும் பொரு ளாதாரச் சுதந்திரங்கள் எவ்வளவு முன்னேற் றமடைந்திருக்கின்றன. என்ற கேள்விகளுக்கு கிழக்கின் உதயம் திருப்திகரமான பதி;ல்களைத் தருகின்ற நாள் வருகின்ற பொழுதுதான் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி மக்களைப் பொறுத்த வரையில் அர்த்தமுடையதாகும்.<br />
வடக்கில் நிலவுவது<br />
குலுங்கும் வசந்தமா -மனம்<br />
கொதிக்கும் கோடையா?</p>
<p>2009 மே மாதம் வடக்கில் யுத்தம் முடிவடைந் தது. வன்னியில் அகதிகளான மூன்று இலட்சம் மக்களில் இரண்டே முக்கால் இலட்சம் பேர் தத்தமது இடங்களில் மீண்டும் குடியேறிவிட்டார் கள். யாழ்ப்பாணத்தி;ல் கடந்த இருபது வருடங்க ளாக உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக அகதிகள் ஆனோரில் சில நூறு குடும்பங்கள்; மீண்டும் தத்தமது பூர்வீக இடங்களுக்குச் சென்று குடியேற அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கொழும்பிலிருந்தும் வட மாகாணத் தமிழர்கள் தத்தமது ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக் கிறார்கள். மன்னாரிலிருந்து அகதிகளாக்கப்பட்ட முஸ்லீம்களில் பெருமளவானோர் தத்தமது பழைய கிராமங்களுக்குச் சென்று மீண்டும் குடி யேறி விட்டார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து விடப் பட்ட முஸ்லீம் மக்கள் இப்போது படிப்படியாகக் குடியேறிக்கொண்டிருக்கிறனர். ஏ-9 கொழும்பு &#8211; யாழ்ப்பாணம் நெடுஞ்சாலை வீதி திறக்கப் பட்டதால் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் பொருட்களின் விலைகளுக்கிடையே முன்னர் நிலவி வந்த வித்தியாசம் பெருமளவு குறைந்தது. யாழ்ப்பாணத்தில் பொருட்களின் தட்டுப்பாடு என்பது இல்லாமல் ஆனது வட மாகாண உற்பத்திப்பொருட்களை தென் பகுதி;ச் சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வாய்ப்புக் களும் அதிகரித்துள்ளன.</p>
<p>பள்ளிக்கூடங்களுக்கு பிள்ளைகள் பயமின்றி சென்று வருகின்றனர் எல்லா இடங்களிலும் வைத்தியசாலைகள் இயங்குகின்றன. யாழ்ப்பா ணக் குடாநாட்டில் மோட்டார் வாகனப் பாவனை கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. வடமாகா ணமெங்கும் எல்லா மதக்கோவில்களும் வெளி நாட்டுத் தமிழர்களின் பண உதவிகளால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. வடமாகாணத்தின் பிரதான நகரப்பகுதியில் இர ண்டாம் இரவுப் படக்காட்சிகள், இரவு 10 மணி க்கும் மேலாக கடைகள் திறக்கப்பட்டிருத்தல் என்பன சாதாரணமாகிவிட்டது. வடமாகாணத்தின் பெரிய சிறிய நகரங்களில் அனைத்திலும் வியா பாரங்கள் அமோகமாக உள்ளன. தற்பொழுது இங்கு நகரம் ஒவ்வொன்றிலும் உள்நாட்டு மற் றும் வெளிநாட்டு; வங்கிகளின் கிளைகள் திறக் ;கப்பட்டுள்ளன. அனைத்து அரசாங்க காரியால யங்களும் புனரமைக்கப்பட்டு செயற்படுகின்றன. யாழ்ப்பாணத்துக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கடந்த வருடம் தெற்கிலிருந்து வந்து சென்றிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்துக்கும் கொழு ம்புக்கும் இடையில் 65 பயணிகள் பேருந்துகள்;; இரவுப் பயணம் செய்கின்றன. மேற்கூறப்பட்ட எல்லாமும் மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் உரிய விடயங்களே. ஆனால் அதன் மறுபக்கங்களை யும் பார்க்கும் போது வேதனையும் சந்தேகங்க ளும் வருகின்றன.</p>
<p>வடமாகாணத்தின் வீதிகள் பெரும்பாலும் குறிப் பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள வீதிகள் மோசமான நிலையில் உள்ளன. கொழும்பிலிருந்து வவு னியா வரையான 250 மீற்றர் தூரத்தை நான் கரை மணித்தியாலத்தில் பயணிக்கும் ஒரு வாக னம் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையு மான 140 கிலோ மீற்றர் தூhத்தை கடப்பதற்கு; ஜந்தரை மணித்தியாலம் ஆகின்றது. அந்தளவு க்கு மோசமான நிலையில் அந்த வீதி உள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் நகரங்களிலும் நகரங் களையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீதிகள் எதுவும் போக்குவரத்துக்கு தகுதியான வீதிகளாக இல்லை. குண்டுகளும் குழிகளும் நிறைந்த வீதிகளாகவே உள்ளன.</p>
<p>யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் குறிப்பாக யாழ்ப்பாண நகரத்தையொட்டிய பகுதிகளும் சகிக்க முடியாத அளவுக்கு நுளம்பு நிறைந்த பிரதேசங்களாக உள்ளன. மற்றும் நீரோடுவதற் கான கால்வாய்கள் எல்லாம் அழுக்குகள் குப் பைகள் தேங்கி அடைத்து நிற்கின்றன. யாழ்ப் பாண மாநகரத்தி;;ன் அநேகமான குளங்கள் அசுத் தங்களின் தொட்டிகளாகவே உள்ளன. சுத்தம் சுகாதாரம் என்பவற்றுக்கும் யாழ்ப்பாண மாநகரத் துக்கும் எந்த வித சம்பந்தமும் இ;ல்லை. இங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாநகர சபை இருந்தும் பயன் என்ன? என்று யாழ்ப்பாண மக் கள் ஏங்கி நிற்கின்றனர். யுத்தம் முடிவுக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்ட பின்ன ரும் யாழ்ப்பாணத்துக்குள் இன்னும் 18000 குடும் பங்கள் அகதிமுகாம்களிலும் மேலும் 2000 குடும்பங்கள் அகதிமுகாம்களுக்கு வெளியே அகதிகளாகவும் அந்தர வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்</p>
<p>வீதிகளை சீனா செப்பனிட்டுத் தரப்போகிறது. ரயில் பாதைகளை இந்தியா அமைத்துத்தரப் போகிறது. என்பவையெல்லாம் நடைமுறையில் இன்னும் பத்திரிகைச் செய்திகளாகவே உள் ளன. இருபது வருட யுத்த காலத்தில் புலிகளின் தலைமை வடமாகாணத்தின்; அரச நிர்வாகங் களை சீரழித்துவிட்டனர். தாம் சொல்வதைத் தவிர வேறெதனையும் செய்யாமல் சாக்குப் போக்குகளைச் சொல்லும் பழக்கத்தை ஏற்படுத் தினர். மக்கள் பணத்தை புலிகளுக்கு சுருட்டிக் கொடுத்து தாமும் பங்கு போட்டுக் கொண்ட வர்களும் உண்டு. இப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தூக்கு தூக்கியும் ஜால்ராப் போட்டுக் கொண்டும் இருப்பவர்கள் மக்களுக் கான சேவைகளைச் செய்வதில் உண்மையான அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. மக் களை அலைக்கழிப்பதும் மக்களுக்கு தமது அதிகாரத்தைக் காட்டுவதிலும் இவர்கள் குறை விடுவதில்லை.</p>
<p>நிர்வாக அமைப்புக்களை ஊழல் அற்றதாக மக்கள் சேவைகள் மீது அக்கறை கொண்டதாக ஆக்குவதற்கான முயற்சிகள் எதனையும் வட மாகாண ஆளுனரோ, அமைச்சரோ இதுவரை மேற்கொண்டதற்கான எந்த அடையாளத்தையும் காணவில்லை. சில அதிகாரிகள் மக்களுக்கு நல்லதைச் செய்ய முனைந்தாலும் அதற்கு தடைகளே ஆயிரம் உள்ளன.</p>
<p>பயக்கெடுதியும் அலைக்கழிப்பும்</p>
<p>யாழ்;ப்பாண மக்கள் மத்தியிலிருந்து இன்னும் புலிப்பயம் போகவில்லை. பிடிபட்டு விடுபட்ட புலிகள்தான் தனிப்பட்ட கொலைகள் கொள்ளை களில் ஈடுபடுகிறார்கள் என்ற வதந்திகள் பரப்பப் பட்டிருக்கின்றன. அதற்கு மேலாக அரச படை கள் மற்றும் பொலிஸ் மீதான பயங்களும் அதிகரித்திருக்கின்றன. நடைபெற்றுவரும் கொள் ளைகள், கொலைகள், தொடர்பாக மக்கள் மத்தி யில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. இந்தச் சந்தேகம் மக்கள் மத்தியில் பெரும் பயக் கெடுதியையே அதிகரித்திருக்கிறது. இந்த சந்தேகங்களையும் அரச படைகள் மீதான பயக் கெடுதியையும் போக்கும் நோக்கில் அரசாங்கம் ஆவன செய்வதாக அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை.</p>
<p>சமூகத் தொண்டர் நிறுவனங்களின் செயற் பாட்டிற்கு அரசாங்கம் இறுக்கல்பிடி போட்டிருப் பதனால் அந்நிறுவனங்களினூடாக பாதிக்கப் பட்ட மக்களுக்குக் கிடைக்கக் கூடிய உதவி கள் கிடைக்க முடியாதபடி தடைப்பட்டுப் போயி ருக்கின்றன. யுத்த காலங்களில் இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர் கள் யுத்தம் முடிவடைந்ததும் தத்தமக்கு வசதி யான தமது பழைய இடங்களுக்கு மாற்றங்கள் கேட்டு அலைகின்றனர். அவர்களெல்லாம் அரச நிர்வாகத்தின் சிவப்பு நாடா முறைகளுக்குள் ளால் தமக்கான தேவைகளைப்பெற முடியாமல் தவிக்கிறார்கள்;. இவ்விடயத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழ் அதிகாரிகளே கடும் போக்கைக் கடைப்பிடித்து அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகி;ன்றன. இது உண் மையானால் தமிழ்த் தேசியம் மற்றும் தமிழர் சுய நிர்ணய உரிமையெல்லாம் இதற்குத்தானா என்ற கேள்வியல்லவா எழுகின்றது.</p>
<p>உதயமும் வசந்தமும்<br />
உண்மையாக வேண்டுமானால்</p>
<p>• வடக்கில் வசந்தம் பூத்துக்குலுங்க வேண் டுமென்றால் கிழக்கில் உதயம் நிச்சயமாக வேண்டுமானால் ஏ 9 வீதி, ஏ 32 வீதி உட்பட அனைத்து நகரங்களையும் ஒன் றோடு ஒன்று இணைக்கும் வீதிகள் அனைத் தும் மிக விரைவில் புனரமைப்புச் செய்யப் பட வேண்டும். காங்கேசன்துறை தொடக்கம் ஓமந்தை வரையிலான ரயி;ல் பாதையும், மதவாச்சி தொடக்கம் மன்னார் வரையிலான ரயில் பாதையும் இன்னும் இரண்டு வருடங் களுக்குள் பூரணமாக புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.</p>
<p>• வடக்குக் கிழக்கின் விவசாய நிலங்கள் அனைத்தும் விவசாய உற்பத்திகளுக்கு பயன்படுத்தும் வகையாகவும் பயன்படுத்தப் படும் நிலத்தின் உற்பத்தித்திறன் அதிகரிக் கப்படும் வகையாகவும் அபிவிருத்தி வேலை த்திட்டங்கள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.</p>
<p>• வடக்கு கிழக்கு மாகாணத்தின் கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்தும் ஊழல் அற்றவை யாகவும் பொருள்வளங்கள் கொண்டவையா கவும் மக்களுக்கு முழுமையான சேவை களை ஆற்றுவதற்கான வகைகள் செய்யப் பட வேண்டும்.</p>
<p>• வடக்கு கிழக்கு மாகாணத்தின் கரையோரங் கள் முழுவதும் மீன்பிடித் தொழில்கள் விரை ந்து விருத்தியடைவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.</p>
<p>• வடக்கு கிழக்கு மாகாணத்தில் அகதி என ஒருவரும் இல்லை என்னும் நிலை ஏற்பட வேண்டும். இடம் பெயர்ந்து மீண்டும் குடி யேறியுள்ள மக்கள் அனைவரும் சுயமான பொருளாதார ஆற்றலைப் பெறும் வகை யில் முறையான உதவிகள் அவர்களைச் சென்றடைய வேண்டும்.</p>
<p>• அரசின் ஆயுத படையணிகளுக்கோ ,பொலி ஸாருக்கோ, மற்றும் அரசுக்கு துணையாக உள்ள கட்சியினர் மற்றும் குழுக்களின் உறுப்பினர்களுக்கோ அல்லது விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள்; புலிகளுக்கோ மக்கள் அஞ்சாது வாழும் சுதந்திரத்தை அரசு முழுமையாக உத்தரவாதம் செய்தல் வேண்டும்.</p>
<p>• இலங்கையில் அரசியல் யாப்புக்கு இணங்க சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை, பேச்சுச்சுதந்திரம், எழுத்துச்சுதந்திரம், பொரு ளாதார சுதந்திரம், அரசியற் சுதந்திரம், தொழிற்சங்க சுதந்திரம், கலை, கலாச்சார சுதந்திரம், வழிபாட்டு சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் போன்ற அடிப்படை மனித சுதந்தி ரங்களை அரசு வட கிழக்கில் முழுமை யாக உத்தரவாதம் செய்தல் வேண்டும்.</p>
<p>வடக்கு கிழக்கின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணம், மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான அதிகாரங்கள் ஒரு சில மத்திய அமைச்சர் களிடத்திலும் ஒரு சில அரச அதிகாரிகளிடத்;தி லுமே குவிக்கப்பட்டுள்ளன. ஆனால் உண்மை யில் புனர்வாழ்வு நடவடிக்கைகளும், புனர்நிர் மாண வேலைத்திட்டங்களும் பரவலான அபி விருத்தி நடவடிக்கைகளும் துரித கதியி;ல் நல்ல முறையி;ல் நடைபெற வேண்டுமானால் மாகாண அரசாங்கங்கள் வலுவான முறையில் செயற்பட வும் உள்ளுராட்சி அரசாங்கங்கள் முறையாக மக்களுக்கு சேவையாற்றவும் கூடிய ஆற்றல்களைக் கொண்டிருக்க இலங்கை அரசு வழிவகை செய்ய வேண்டும்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kannoddam.com/wordpress/?feed=rss2&#038;p=271</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கண்ணோட்டம் ஆசிரிய தலையங்கம் &#8211; வெளியீடு 57</title>
		<link>http://www.kannoddam.com/wordpress/?p=267</link>
		<comments>http://www.kannoddam.com/wordpress/?p=267#comments</comments>
		<pubDate>Sat, 19 Feb 2011 16:52:47 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கண்ணோட்டம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.kannoddam.com/wordpress/?p=267</guid>
		<description><![CDATA[2011ம் ஆண்டு இலங்கையின் தேசிய இனங்களுக்கிடையிலான நல்லுறவுக ளும் யுத்தத்தால் அழிந்து கிடக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணம், மற்றும் துரித பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளும் மீட்சி பெற வேண்டும் இலங்கை முழுவதும் ஒரு வளம் மிக்க நாடாக உருவாக வேண்டு;ம் என்பதே நல்லெண்ணம் கொண்ட எல்லோரினதும் விருப்பமாகும் இந்த நாட்டை கொள்ளையர்களும் ,கொலையாளிகளும் ஊழல் பேர்வழிக ளும,; ஊரையெல்லாம் சுருட்டி தன் உலையில் போடும் மோசடிப் பெருச் சாளிகளும் தலையெடுத்து ஆட்டம் போடுகின்ற நிலைமை]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.kannoddam.com/wordpress/wp-content/uploads/2011/02/kannottam_new_logo.jpg"><img src="http://www.kannoddam.com/wordpress/wp-content/uploads/2011/02/kannottam_new_logo-150x65.jpg" alt="" title="kannottam_new_logo" width="150" height="65" class="alignleft size-thumbnail wp-image-270" /></a>2011ம் ஆண்டு இலங்கையின் தேசிய இனங்களுக்கிடையிலான நல்லுறவுக ளும் யுத்தத்தால் அழிந்து கிடக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணம், மற்றும் துரித பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளும் மீட்சி பெற வேண்டும் இலங்கை முழுவதும் ஒரு வளம் மிக்க நாடாக உருவாக வேண்டு;ம் என்பதே நல்லெண்ணம் கொண்ட எல்லோரினதும் விருப்பமாகும்<br />
இந்த நாட்டை கொள்ளையர்களும் ,கொலையாளிகளும் ஊழல் பேர்வழிக ளும,; ஊரையெல்லாம் சுருட்டி தன் உலையில் போடும் மோசடிப் பெருச் சாளிகளும் தலையெடுத்து ஆட்டம் போடுகின்ற நிலைமை முடிவுக்கு வர வேண்டும்.<br />
பட்டதெல்லாம் போதும் கெட்டதெல்லாம் காணும் இனி ஒரு புதிய விதி செய்வோம் இந்நாட்டின் அனைத்து இன மக்களும் ஒருவரை ஒருவர் மதி த்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒருவர் நன்மையை மற்றவரோடு பகிர்ந்து ஒருவரது துன்பத்தை மற்றவரும் தானும் பரிமாறிக்கொண்டு அதில் பங்கெடுத்து சகோதரர்களாக வாழும் நிலைமையை இந்த நாடு அடைய வேண்டும்.<br />
<span id="more-267"></span>எமக்கு அண்மையிலுள்ள இந்திய நாடு பல பத்துக்கணக்கான மதவழிபாடு களையும், பல நூற்றுக்கணக்கான மொழிகளையும் பல ஆயிரக்கணக்கான கலாச்சாரங்களையும் கொண்டிருக்கும் ஒரு நாடு. இந்திய நாட்டில் ஒவ் வொருவரும் தமது மொழியோடும் தமது மதத்தோடும் தமது கலாச்சாரத் தோடும் பிரதேசத்தோடும், இணைத்துக்கொண்டு வௌ;வேறு அளவில் உள்ளமைந்த சமூகங்கள் ஆக வாழுகின்ற போதிலும் இந்தியா என்று வந்தவுடன் தாம் ஒரு தேசத்து மக்களென உணர்ச்சி பெற்று நிற்கிறார்கள்.<br />
அவ்வாறான ஒரு நிலை எமது நாட்டிலும் வரவேண்டும் இலங்கைக்கு ஒரு பிரச்சனை என்றால் அது ஒவ்வொரு தமிழருக்;கும் ஒவ்வொரு சிங்கள வருக்குமான பிரச்சனை என்ற உணர்வு வரவேண்டும். இவ்வாறான இதய த்தை தொட்டுநிற்கும், ரத்தத்தோடு ஊறி நிற்கும் ஒரு தேச உணர்வு என்பது சும்மா வராது அது ஒவ்வொருவரது உளப்ப+ர்வமான விருப்பத்தில் இருந்து வரவேண்டும் அது ஒவ்வொருவரது வாழ்க்கையோடும் நம்பிக்கைக ளோடும் பின்னிப் பிணைந்த ஒரு கலாச்சாரமாக வளர்ந்திருக்க வேண்டும்<br />
அதனை எந்த வகையிலும் திணிப்பதால் வளர்த்து விட முடியாது எந் தப் பலம் கொண்ட கட்டாயத்தினாலும் சாதித்து விட முடியாது பல்தேசிய, பல்லின, பல்மத, பல்மொழி பேசும் மக்களைக் கொண்ட ஒரு தேசத்தில் ஒவ்வொரு மொழி இனத்தவரும் ஒவ்வொரு மதத்தினரும், ஒவ்வொரு தனித்துவமான இன கலாச்சாரம் கொண்டவரினதும் மொழியை, மதவழி பாட்டை, கலாச்சாரப் பண்பாட்டை, அடிப்படைப் பொருளாதார உரிமை களை அங்கீகரிப்பதன் மூலமும் அவை ஒவ்வொன்றும் வளம் பெற சமநீதியுடன் ஆதாரமாக இருப்பதன் மூலமும் தான் தேசிய ஒற்றுமையை உருவாக்கிட முடியும்<br />
சிங்களவர்கள் எண்ணிக்கை ரீதியில் பெரும்பாலானவர்கள் என்பதைக் கொண்டோ அல்லது பௌத்தர்கள் பெரும்பாலானவர்கள் என்பதைக் கொண்டோ அல்லது சிங்கள பௌத்தர்களின் கைகளிலே அதிகாரம் உள்ளதைக் கொண்டோ தமிழ் பேசும் மக்களின் மீது இலங்கையர் என்கிற தேசிய உணர்வு ஏற்பட வேண்டும் என்பதை வலிந்து திணிக்க முடியாது. அவ்வாறான திணிப்பு முயற்சிகள் இந்த நாட்டுக்கும் தேசிய சமூகங்களுக்கும் பாதஙகங்களையே விளைவிக்கும் என்பதே கடந்தகால அநுபவமாகும் என்பதை மறந்து விடக்கூடாது<br />
இலங்கையில் பெரும்பான்மையான சிங்களவர்கள் மத்தியில் இந்த நாடு சிங்களவருக்கே சொந்தம்! இந்த நாட்டை கௌதம புத்தர் பௌத்தர்களுக் காகவே உருவாக்கினார்! துட்டகைமுனு எல்லாளனைத் தோற்கடித்து சிங்களவர்களின் பெருமையை நிலைநாட்டினார்! என்ற வகையான நம்பிக் கைகளும் எக்காளங்களும் இங்கு மித மிஞ்சி நிற்கும்வரை: தமிழர்கள் இந்த நாட்டில் பாதுகாப்பற்றவாகளாக, அதிகார அமைப்பில் பங்கில்லாமல் ஒதுக்கப்பட்ட ஒரு இனமாக, புறக்கணி;க்கப்பட்ட ஒரு சமூகமாக, ஆட்சியிலி ருக்கும் சிங்கள அதிகாரத்திற்கு பயந்து அடங்கி வாழ வேண்டிய ஒரு இனமாக இருக்கின்ற வரை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தாம் எல் லோரும் இலங்கையர் என்ற உணர்வை ஏற்படுத்துவது சாத்தியமாகாத விடயமாகும்<br />
தமிழில் தேசிய கீதம் இருக்கக்கூடாது! தமிழர்களை பெரும்பான்மையினரா கக் கொண்ட மாநிலங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படக்கூடாது! இலங் கையில் வாழும் தமிழர்கள் ஒரு தேசிய இனமல்ல! என்ற தொனிகளில் ஆட்சியிலுள்ளவர்கள்; பேசுவது இந்த நாட்டு மக்களை உளப்ப+ர்கமாக ஒன்று படுத்தமாட்டாது. ஆயுதங்களும், படைகளும் அதிகார மமதைகளும் மக்களின் மனங்களை வெல்லமாட்டா!<br />
மக்களை அன்பாலும், அரவணைப்பாலும் ,அவர்களிடம் நிலவும் பண்புகளை யும், நம்பிக்கைகளையும், வழக்கங்களையும், பழக்கங்களையும் அங்கீகரிப்ப தன் மூலமே ஒரு தேசத்தவர் என்ற உணர்வை வளர்க்க வேண்டும்.<br />
இந்த நாட்டில் சிறுபான்மையினராக வாழும் மக்கள் எந்த வகையிலும் சிறுபான்மையினர் என்பதற்காக அஞ்சத் தேவை இல்லை: அவர்களுக்கு எந்த வகையிலும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது: அரசியல் அதிகாரத்தில் அங்கம் பெறுவதில் சிங்களவர்களும், தமிழர்களும் சமநீதி கொண்டிருப்பர் சிறுபான்மை தேசிய இனங்கள் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசங்க ளில் மாநில சுயாட்சி கொண்ட ஆட்சி அமைப்புக்கள் அமையும்: அவை நிர்வாக அதிகாரங்களோடும் கடமைகளோடும் பொறுப்புக்களோடும் செயற் படும் வாய்ப்புக்கள் கொண்டவையாக இருக்கும் என்பதை அரசுத் தலைவர் கள் உறுதிப்படுத்துவதன் மூலமே இந்த நாட்டின் அனைத்து மக்கள் மத்தியிலும்; இந்த நாடு ஒரு தேச மென்ற உணர்வு ஏற்படுவதை நோக்கி முன்னேறும்;<br />
இந்த நாடு சமாதானமும் ,சகோதரத்துவமும், முன்னேற்றமும் கொண்ட நாடு என்பதாக உலக வரைபடத்தில் அங்கீகாரம் பெறும் நாளை நோக்கி நடைபோடுவதை இந்த நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி அவர்களும் அவரோடு இணைந்து நிற்கும் ஆட்சியாளர்களும் உதாரண புருஷர்களாக முன்னோக்கி நடை போட வேண்டும். இதுவே இலங்கை மக்களின் இன்றைய அவா</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kannoddam.com/wordpress/?feed=rss2&#038;p=267</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அன்பார்ந்த நண்பர்களே! ஆற்றல்மிகு தோழர்களே&#8230; தோழர் வரதராஜப்பெருமாள் கடிதம் வெளியீடு-57</title>
		<link>http://www.kannoddam.com/wordpress/?p=300</link>
		<comments>http://www.kannoddam.com/wordpress/?p=300#comments</comments>
		<pubDate>Sat, 19 Feb 2011 15:06:23 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கண்ணோட்டம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.kannoddam.com/wordpress/?p=300</guid>
		<description><![CDATA[உங்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த புதுவருட நல்வாழ்த்துக்களையும் பொங்கல் நல்வாழ்த்துக்களையம் ஒரு சேர தெரிவித்துக் கொள்கிறேன். எமது வாழ்வில் கடந்து போயுள்ள 2010 ம் ஆண்டு அதற்கு முந்திய ஆண்டுகளைவிட பல நல்ல விடயங்களை நமக்கு நடத்திப் போயிருக்கிறது. இந்த 2011ம் ஆண்டா னது அவற்றையும் விட மேலும் பல நல்ல விடயங்களை நமக்குத் தரும் ஆண்டாக அமைய வேண்டுமென மனதார விரும்பு வோமாக! நமக்கு கடந்த ஆண்டில் என்னவெல்லாம் கிடைக்கவில்லை என்ற கவலையை விட்டு]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: justify;"><a href="http://www.kannoddam.com/wordpress/wp-content/uploads/2011/02/16030531.jpg"><img class="alignleft size-thumbnail wp-image-304" title="16030531" src="http://www.kannoddam.com/wordpress/wp-content/uploads/2011/02/16030531-150x150.jpg" alt="" width="150" height="150" /></a>உங்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த புதுவருட நல்வாழ்த்துக்களையும் பொங்கல் நல்வாழ்த்துக்களையம் ஒரு சேர தெரிவித்துக் கொள்கிறேன். எமது வாழ்வில் கடந்து போயுள்ள 2010 ம் ஆண்டு அதற்கு முந்திய ஆண்டுகளைவிட பல நல்ல விடயங்களை நமக்கு நடத்திப் போயிருக்கிறது. இந்த 2011ம் ஆண்டா னது அவற்றையும் விட மேலும் பல நல்ல விடயங்களை நமக்குத் தரும் ஆண்டாக அமைய வேண்டுமென மனதார விரும்பு வோமாக!</p>
<p><span id="more-300"></span><br />
நமக்கு கடந்த ஆண்டில் என்னவெல்லாம் கிடைக்கவில்லை என்ற கவலையை விட்டு என்னென்ன நல்ல விடயங்கள் கிடைத்தன என்பதில் திருப்தியடைவோம். இந்த ஆண்டில் நமக்கு எவையெவை கிடைக்கமாட்டா என்பதைத் தெரிந்திரு ந்தும் அவற்றுக்காக ஏங்கி; நம்பிக்கை யீனங்களோடு வாழ்வதை &#8211; செயற்படு வதை விட்டு எவையெவை நல்லவை யாக நடப்பதற்கு &#8211; கிடைப்பதற்கு சாதகங் கள் உள்ளன அவற்றை எமக்கு நிச்சயமா கக் கிடைக்கும் வகைக்காக வேண்டி எவ்வௌற்றை நாம் செய்ய வேண்டும் என்பதில் நாம் எமது முயற்சிகளை முன் னெடுக்க வேண்டும் &#8211; எமது உழைப்பைச் செலுத்துதல் வேண்டும்.<br />
இந்த அணுகுமுறை எவ்வாறு ஒவ்வொரு வரதும் தனிப்பட்ட நலன் சார்ந்த விடயங் களுக்கும் பொருந்துமோ அதேபோலவே எமது சமுதாய ரீதியான பொதுநலன் சார் ந்த விடயங்களுக்கும் பொருந்தும் என்று கருதுகிறேன்.<br />
உங்களுக்குத் தெரியும், 2008 ம் ஆண்டு எமது மண்ணில் நடந்து கொண்டிருந்த யுத்தப் பேரழிவுகள் &#8211; சீரழிவுகள், அவலங் கள், ஓலங்கள்; யுத்தப் பைத்தியக்காரர்க ளின் அகங்காரம் பிடித்த கொலைகார முழ க்கங்கள்;; ; யுத்தப் பிரபுக்களின் பயங்கரவாத வெறிபிடித்த அரக்கத்தனமான செயற்பாடு கள் என்பவையெல்லாம் எப்போது முடிவு க்கு வரும் என ஏங்கியிருந்தோம். அவை 2009 ம் ஆண்டோடு முடிவுக்கு வந்தன.<br />
2009 ம் ஆண்டின் இறுதி மாதங்களில் எம்மை நிறைத்திருந்த ஏக்கங்களை மீள நினைத்துப் பாருங்கள்:-<br />
• யுத்தத்தின் முடிவில் அகதிகளாக முள் ளுவேலி முகாம்களுக்குள் மூன்று லட் சம் வன்னித் தமிழர்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறதோ?<br />
• இந்த மூன்று லட்சம் தமிழர்களும் வவு னியாவில் அவர்களுக்காக உருவாக் கப்பட்ட அகதிமுகாம்களிலேயே பல ஆண்டுகளுக்கு வைக்கப்படப் போகி ன்றார்களோ?<br />
• யுத்தத்தின் வெற்றிக் களிப்பில் மிதந்து கொண்டிருக்கும் ராஜபக்ஷ அரசாங்கம்; முல்லைத்தீவு மாவட்டத்தின் பகுதிகளு க்கு தமிழர்களை குடியேற விடாமல் வைத்திருந்து அங்கெல்லாம் சிங்களவர் களைத் திட்டமிட்டு குடியேற்றப் போகி றதோ? என்றெல்லாம் நாம் ஏங்கியிருந்த காலம் அல்லவா!<br />
அந்த மாதங்களில் அப்படியான ஏக்கங் களைத் தானே உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் கொண்டிருந்தார்கள்;. புலி ஆத ரவு அரசியற் பிரதிநிதிகளும் புலிப் புத்தி ஜீவிகளும் புலிப் பத்திரிகைகளும் அப்படித் தானே தமிழர்களுக்கு பயம் காட்டி பயமு றுத்தி தங்களது வியாபாரங்களை செய்து கொண்டார்கள்; தங்களது அரசியல் லாபங் களைப் பெற்றுக் கொண்டன.<br />
ஆனால் 2010 ம் ஆண்டில் அகதி முகாம் களி;ல் அடைக்கப்படிருந்த வன்னி மக்க ளில் தொண்ணூறு சதவீதத்துக்கும் மேற் பட்டோர் அவரவரது கிராமங்களுக்கும் சொந்த இருப்பிடங்களுக்கும் மீண்டும் சென்று குடியேறி விட்டார்கள்.<br />
யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலய எல்லைகள் உருவாக்கப்பட்டு விரிவாக்கப் பட்டதன் விளைவாக சுமார் ஒரு லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டு கடந்த 20 ஆண் டுகளாக அகதி முகாம்களில் முடக்கப்ப ட்ட சீவியத்தையே நடத்த வேண்டியவர்க ளானார்கள். இவர்களில் சுமார் 25 ஆயிரத் துக்கு மேற்பட்டோர் மேலைத்தேய நாடுக ளுக்குப் போய்விட்டார்கள். ஏனைய 75 ஆயிரம் பேர் அதாவது சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் அகதி முகாம்களில் தொடர் ந்து வாழ்ந்தார்கள். 2010ம் ஆண்டின் இறுதி மாதங்கள் அவர்கள் அவர்களது கிராமங்களுக்கு மீண்டும் திரும்பிச் சென்று குடியேறுவது தொடர்பான சில நம்பிக்கை ஒளிகளைக் காட்டியுள்ளன. காங்கேசன் துறை வீதிக்கு வலப் பக்கமாக உள்ள கிராமங்களில் மக்கள் மீண்டும் குடியேறு வதற்கான வழிகள் படிப்படியாக திறக்கப் படுகின்றன. பலாலி வீதியோடு இருந்த வசாவிளான் மகாவித்தியாலயம் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது. பச்சிலைப் பள்ளி நிர்வாகப் பிரிவில் ஒரு சில கிராமங் களைத் தவிர ஏனைய இடங்களிலெல் லாம் மக்கள் தத்தம் கிராமங்களில் குடியே றிவிட்டார்கள்.<br />
1996 ம் ஆண்டுக்குப் பின்னரிருந்து தொட ர்ந்து நடைபெற்ற யுத்தம் காரணமாக யாழ் ப்பாணத்தின் பல்வேறு பாகங்களில் இரு ந்து மக்கள் அகதிகளாக கடந்த 14 ஆண்டு களாக அகதி வாழ்க்கையை எந்தவொரு இடமும் உறுதியாக இல்லாமல் இடங்கள் மாறி மாறி ஓடி அந்தரமான வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது. யுத்தம் முடிந்த தன் பின்னரும் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்று குடியேற அரச இராணுவம் அனுமதிக்கவில்லை. அது பற்றிக் கேட்ட நேரமெல்லாம் இராணுவ அதிகாரிகள் ஒன்றில் பாதுகாப்பு அமை ச்சின் அனுமதி இல்லையென்றார்கள், அந் தக் காரணம் இல்லையென்றால் இன்ன மும் அந்த இடங்களில் கண்ணி வெடிகள் அகற்றப்படவில்லை என்றார்கள். ஆனால் 2010 ம் ஆண்டின் இறுதியில் இருந்து பார்த்தோமாயேனால் அந்த வகையாக அவலப்பட்ட மக்களில் இன்னமும் ஓரு மிகச் சில குறிப்பிட்ட சிறிய கிராமங்களை தவிர ஏனைய இடங்களிலெல்லாம் அரசு மக்களை மீண்டும் குடியேறுவதற்கான வகைகளைச் செய்துள்ளது.<br />
எனவே, வன்னியில் 3 இலட்சம் அகதி கள் என்ற நிலைமாறி இப்போது 30 ஆயி ரம் பேருக்கும் குறைவானவர்களே என் னும் நிலை ஆகியிருப்பது கண்டு திருப்தி கொள்வோம். எஞ்சி இருப்போரும் அவரவ ரது கிராமங்களுக்கு மீண்டும் சென்று விரைவில் குடியேறி விடுவார்கள் என்று நம்பிக்கை கொள்வோமாக!<br />
கிழக்கு மாகாணத்தில் இலட்சக் கணக்கா னவர்கள் அகதிகளானார்கள் என்ற நிலை போய் இன்று திருகோணமலை மாவட்டத் தில் அதுவும் சம்பூர் மாவட்டத்தைச் சேர் ந்த மக்கள் சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே எதிர்காலம் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இன்னும் ஒரு குறுகிய காலத்துள் விடிவு பிறக்கும் என மனச்சாந்தி கொள்வோம்.<br />
யாழ்ப்பாணத்துக்குள்ளே இன்னமும் அகதி களாக இருப்பவர்கள் படிப்படியாக குடி யேறி அனைவரும் தத்தம் இடங்களுக்கு மீளச் சென்று விடுவார்கள் எனத் திருப்தி கொள்வோம்.<br />
நாம் நேற்றையை விட இன்று நல்ல நிலையில் உள்ளோம் என மனத்திருப்தி கொள்வோம். இவ்வாறான மனத் திருப்தி எமது மக்களுக்கான நாளைய நம்பிக்கை களைத் தரும் வகையில் நாமும் நம்பிக் கைகளோடு செயற்படுவோமாக!<br />
இன்னமும் அகதிகளாக முகாம்களில் அடைபட்டு அரச உதவிகளுக்காக எமது தமிழின மக்கள் கையேந்தி நிற்கும் நிலை இந்தப் புதிய ஆண்டில் முடிவுக்கு வர வேண்டும் என்பதில் உறுதியும் நம்பிக்கை யும் கொள்வோம்.<br />
நாம் நேற்றையை விட இன்று முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையை நாம் எமது சமூகத்துக்கு &#8211; மக்களுக்கு கொடுக்க வேண்டிய கடமைப்பாட்டில் இரு க்கிறோம் என்பதை தமிழ்ச் சமூகத்தின் எந்த பொறுப்புணர்வுள்ள அரசியற் தலை வரும் சமூகத் தலைவரும் கருத்திற் கொள்ள வேண்டும்.<br />
ஒரு சமூகத்தின் வாழ்வு தீப்பற்றி எரிய அதில் தாங்கள், தங்களுக்குக் கிடைத்த கொள்ளிகளைப் பிடுங்கி தமது வாழ்வை வளம்படுத்திக் கொள்வதற்கு ஒரு சமூக விரோத வியாபாரக் கூட்டம் எங்கும் இருக் கத்தான் செய்யும். அவர்கள் தொடர்பாக அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள், மக்கள் மத்தியில் தெளிவான விழிப்புண ர்வை ஏற்படுத்தி எச்சரிக்கையாக இருக்க வழி செய்ய வேண்டும்.<br />
மாறாக அவ்வாறான சமூகவிரோத வியா பாரக் கூட்டத்தோடு சேர்ந்து தமது சுயநல ன்களை தக்க வைத்துக் கொள்ளவும் மேலும் சுலபமாக தமது நலன்களை பெரு க்கிக் கொள்ளும் வகையாகச் செயற்படும் அரசியல் சமூகப் பிரமுகர்கள் அந்த மோச மான சமூக விரோத வியாபாரிகளை விட வும் மோசமான சமூக விரோதிகளாவர் என்பதை நாம் புரிந்து மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.<br />
நான் உங்களை முந்திய ஆண்டை விட கடந்த ஆண்டு நன்றாகவே போனது என்று சொல்வதையோ! கடந்த ஆண்டை விட பிறந்துள்ள ஆண்டு நன்றாகவே இருக்கும் என்று நம்பிக்கை கொள்ளும்படி கூறுவ தையோ நீங்கள் எல்லாமே கடந்த ஆண்டு களில் நன்றாகவே நடந்தன என்று நான் கூறுவதாகவோ அல்லது எல்லாமே இப் போது பிறந்துள்ள ஆண்டில் நல்லதாக மட்டுமே நடக்கும் என்று உங்களுக்கு நான் சுடலை ஞானம் போதிப்பதாகவோ தவறா கப் புரிந்து கொள்ளாதீர்;கள்.<br />
யுத்தத்தால் அவலப்பட்டு அகதிகளாகி மீண்டும் தத்தமது இடங்களில் குடியேறியு ள்ள மக்கள் இன்னமும் அந்தரித்த வகை யான நிலையிலேயே வாழ்கிறார்கள். அவ ர்களுக்கான அரச உதவி போதியதாய் இல்லை. தங்களைத் தேடி வந்து யாரா வது ஏதாவது தந்துதவ மாட்டார்களா என் னும் கையேந்திய மனோநிலையிலேயே மக்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஓவ் வொரு தமிழ்க் குடும்பத்தவரும் தங்களது சுயமான பொருளாதார வாழ்வை மீட்டெடு த்து கௌரவமாக வாழ்வதற்காகக் கடுமை யாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அச்சங்களற்றும் அடிப்படையான மனித உரிமைகளோடு மரியாதையாகவும் வாழ் வதற்கு பாதுகாப்பான நீதியான சட்ட மற் றும் சமூகச் சூழல் எப்போது வரும் என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.<br />
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்மக்கள் தற்போது தம்மைச் சூழ்ந்துள்ள அரசியல் பற்றியென்ன அவர்களைச் சூழ்ந்து நிற்கும் அடாவடித்தனங்கள், அவர்களைச் சுரண் டிக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அயோக்கியத்தனங்கள் பற்றிக் கூட அவர் கள் ஒரு சில நிமிட நேரங்களைச் செலவ ளித்து, காது கொடுத்துக் கேட்கவோ, சிந்த னைக்கு எடுத்துக் கொள்ளவோ தயாராக இல்லை. ஏனெனில் சொந்த மண்ணில் வாழும் தமிழர்களின் வாழ்நிலை அவ்வ ளவு இக்கட்டானதாக உள்ளது.<br />
எதிர்காலத்தில் இலங்கையில் -<br />
• எங்கும் எதிலும் எவர் மத்தியிலும் &#8211; ஜனநாயகம் தலைசிறந்து வாழும் ஒரு கலாச்சாரமாக ஆக வேண்டும்<br />
• எங்கும் ஒவ்வொருவரதும் அடிப்படை யான அரசியல், சமூக, பொருளாதார உரி மைகளும் வளர்ச்சியடைந்த நாகரீகங்க ளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து தனிமனித உரிமைகளும் சட்ட ஒழுங்குக ளாலும் நீதியமைப்பின் கட்டமைப்பாலும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்<br />
• தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான் மையாகக் கொண்ட பிரதேசங்களில் உய ர்ந்தபட்ச மாநில சுயாட்சி அமைப்பைக் கொண்ட ஆட்சி அமைப்பு முறைமை செய ற்பட வேண்டும்.<br />
• யுத்தத்தால் சீரழிந்து கிடக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இலங்கையின்; ஏனைய பகுதிகளுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத வகையில் அபிவிருத்தி யடைவதற்கான முன்னேற்றங்களை அடைய வேண்டும்.<br />
இந்த விருப்பங்களோடு பிறந்துள்ள ஆண் டின் எதிர்வரும் மாதங்களை நம்பிக்கை களோடும் உறுதிகளோடும் சந்திப்போம்.<br />
இப்படிக்கு<br />
உங்கள் நண்பன் &#8211; தோழன்<br />
அ. வரதராஜப்பெருமாள்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.kannoddam.com/wordpress/?feed=rss2&#038;p=300</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

